பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மொழி இனம் கடந்து நாடு முழுவதும் இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். பலவிதமான பாடல்கள் என பல தலைமுறையினரை தனது குரலால் மகிழ்த்து வந்திருக்கிறார் எஸ்பிபி.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து , தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தனது தந்தையின் உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல்களை பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தது. இதனையடுத்து நாடு முழுவதும் பிரபலங்கள் ரசிகர்கள் பலரும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் அவர் இன்று மதியம் சரியாக 1.04 மணியளவில் மரணமடைந்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். அவரது மறைவு ரசிகர்கள் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Singer SP Balasubrahmanyam Passes Away | பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்

People looking for online information on SP Balasubramaniam, SPB will find this news story useful.