சிம்புவின் மாஸ்டர் பிளான் - சென்னை திரும்பியதும் மீட்டிங்கிற்கு ஏற்பாடு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்பு தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பியதும் பல அதிரடி முடிவுகளை எடுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தில் சிம்பு நடிக்கவிருந்தது. அப்படம் வேறு நடிகரை வைத்து உருவாகும் என தயாரிப்பு தரப்பு அறிவித்ததையடுத்து, சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் சிம்பு இயக்கத்தில் ‘மகாமாநாடு’ என்ற திரைப்படம் விரைவில் உருவாகும் என்று சிம்பு தரப்பில் அறிவிப்பு வெளியானது.

இதனிடையே, தாய்லாந்தில் ஓய்வில் இருக்கும் சிம்பு சென்னை திரும்பியதும், ரசிகர் மன்ற முக்கிய உறுப்பினர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். ரசிகர் மன்றம் சார்பாக சில மாற்றங்களும், வளர்ச்சி திட்டங்களும் ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. மேலும், சமூக நலத்திற்கு தேவையான சில வளர்ச்சி திட்டங்களும் வைத்திருப்பதாக தெரிகிறது. எதிர்ப்பார்க்காததை எதிர்ப்பார்க்கலாம் என கருதப்படுகிறது.

தற்போது கன்னடாவில் சூப்பர் ஹிட்டான ‘மஃப்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் கவுதம் கார்த்திக் உடன் இணைந்து சிம்பு நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து நடிகை ஹன்சிகா நடிக்கும் 50வது திரைப்படமான ‘மஹா’ படத்தில் கேமியோ ரோலில் சிம்பு நடித்துள்ளார்.

Simbu's masterplan after returning to Chennai Maghaamaanaadu STR

People looking for online information on Simbu, Simbu Cine Arts, Str will find this news story useful.