"அடுத்த ஜென்மத்துலயும்..".. BIGG BOSS அரங்கில் சிம்பு எமோஷனல் பேச்சு.., என்ன ஆச்சு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் இதுவரை நடந்து முடிந்துள்ளது.

Advertising
>
Advertising

Dowry பற்றி கல்லூரி புத்தகத்தில் வந்த விஷயம்?.. "அடேங்கப்பா.." விளாசித் தள்ளிய Vignesh Shivan.. வைரல் பதிவு

இவை அனைத்துமே மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பினை பெற்றிருந்த நிலையில், தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியை மற்ற பிக்பாஸ் சீசன்களை போல, நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வந்தார். ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதையடுத்து, நடிகர் சிம்பு தற்போது தொகுத்து வழங்கி வருகிறார்.

அசத்தலாக வழங்கும் சிம்பு

முதல் முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கி வந்தாலும், வார இறுதியில் வந்து, போட்டியாளர்களின் செயல்பாடு குறித்து, விமர்சித்து தக்க பதிலடி கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார் சிம்பு. நிகழ்ச்சியை அசத்தலாக தொகுத்து வரும் சிம்புவுக்கும் மக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இறுதிக் கட்டத்தில் பிக்பாஸ் அல்டிமேட்

இதனிடையே, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, 60 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் ஃபைனல்ஸ் நிகழும் என்றும் கூறப்படுகிறது. பாலா, தாமரை, ரம்யா பாண்டியன், ஜூலி, அபிராமி மற்றும் நிரூப் ஆகிய ஆறு போட்டியாளர்கள், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர்.

எமோஷனல் ஆன சிம்பு

இதில், யார் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக இருக்கப் போகிறார்கள் என்பது பற்றி, ரசிகர்கள் பலர் கணித்து, தங்களின் கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில், கண்ணீர் விட்டு மனம் உருகி போனார் நடிகர் சிம்பு. போட்டியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் சிம்பு, பெற்றோர்கள் குறித்த டாபிக் ஒன்றை ஆரம்பிக்கிறார்.

அப்போது பேசிய நிரூப், "என்னுடைய அப்பாவுக்கு எப்போதும் வேலை தான் முக்கியம் என்னுடன் நேரம் செலவிட மாட்டார்" என உருக்கத்துடன் குறிப்பிட்டார். மற்ற போட்டியாளர்களும் தங்களின் பெற்றோர்கள் குறித்து பேசுவதாக கூறப்படும் நிலையில், அடுத்ததாக சிம்புவும் தன்னுடைய தாய் தந்தை பற்றி பேச ஆரம்பித்தார்.

இப்டி ஒரு அப்பா, அம்மா..

அப்போது, "எனக்கு கிடைத்தது போன்று அம்மா, அப்பா வேறு யாருக்காவது கிடைப்பார்களா என்பது எனக்கு தெரியவில்லை. ஏனென்றால், என்னுடைய சிறு வயதில் என்னை அப்படி பார்த்துக் கொண்டார்கள். அடுத்த ஜென்மத்தில் இப்படி ஒரு பெற்றோர்கள் எனக்கு கிடைப்பார்களா என்பதே தெரியவில்லை" என பேசிக் கொண்டிருக்கும் போதே, சிம்புவிற்கு கண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து, பேச முடியாமலும் தடுமாற்றம் கண்டார் அவர்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில், போட்டியாளர்களை லெஃப்ட், ரைட் வாங்கும் சிம்பு,  தற்போது முதல் முறையாக மனம் உருகி கண்ணீர் விட்டுள்ள சம்பவம், ரசிகர்களையும் அதிகம் உருக செய்துள்ளது.

"நான் சொன்ன மாதிரியே பண்ணியா நெல்சா??.." .. Beast விஜய் பேட்டி - தொகுப்பாளினி வைரல் Post

தொடர்புடைய இணைப்புகள்

Simbu emotional speech about parents bigg boss ultimate

People looking for online information on BB Ultimate, Bigg Boss Ultimate, Niroop Nandakumar, SilambarasanTR, Simbu emotional speech will find this news story useful.