MAANAADU: "சொல்லி வெச்ச மாதிரி ஷூட்டிங்கில் நடந்த ஒரு மேஜிக்!".. படக்குழுவுக்கு சிம்பு அளித்த பரிசு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்‘மாநாடு’.

இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் TR கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலாகவே, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் கூடிக்கொண்டே போனது.  சிம்புவுடன் கல்யாணி ப்ரியதர்ஷினி, எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் சிங்கிள் ஏற்கனவே வெளியான நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் சிலம்பரசன் TR ‘மாநாடு’ படத்தில் பணியாற்றியவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அதன்படி, இப்படத்தில் பணியாற்றிய 300 பேருக்கு விலை உயர்ந்த கை கடிகாரத்தை பரிசாக வழங்கி அனைவரையும் மகிழ்வித்தார்.

அனைவருக்கும் வாழ்த்துக்களுடன் பரிசுகளையும் அளித்த நடிகர் சிலம்பரசனுக்கு படக்குழுவினர் அனைவரும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

இதனிடையே இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்ட தேதி ஜூலை 10, 2020 என்றும், சரியாக அதே தேதியில், ஓராண்டு கழித்து ஜூலை 10, 2021 எனும் அதே தேதியில், அதே நேரத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், திட்டமிடப்படாமலேயே இந்த மேஜிக் நடந்துள்ளதாகவும்,  இப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ALSO READ: ‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்.. மாதவன் - விஜய் சேதுபதி ரோலில் யார்னு பாருங்க!  மாஸ் அப்டேட்!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan gift to maanaadu crew shoot end in same date

People looking for online information on Maanaadu, Silambarasan TR, Venkat Prabhu, Yuvan Shankar Raja will find this news story useful.