“டேய்.. சாவடிச்சிடுவேன்.. ”.. திலீப்குமார் குறித்த கமெண்ட். கடுமையாக சாடி சித்தார்த் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவின் பழம்பெரும் பாலிவுட் நடிகர்களுள் ஒருவரான திலீப் குமாரின் மரணம் இந்திய திரை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திலீப்குமாரின் இழப்பு, இந்திய திரையுலகில் ஒருபோதும் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது. பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியதோடு, 'தேவதாஸ்' படத்தில் நடித்த திலீப்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திலீப் சாபின் மரணம் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் பலரும் மீள முடியாத நேரத்தில், ஒரு பொருந்தாத கருத்து நடிகர் சித்தார்த் கவனத்தை ஈர்த்தது. நடிகர் சித்தார்த், தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக் கூடியவர். நடிகர் திலீப் குமாரின் மறைவுக்கு தனது இரங்கலை தமது ட்விட்டரில் தெரிவித்ததோடு, திலீப் குமாரின் ஒரு பழைய பொன்னான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

தமது ட்வீட்டில், “ஒரு மாபெரும் மரம் விழுந்துவிட்டது. இன்றைய தலைமுறை அவரைப் பற்றி அறிந்து கொண்டாடுகிறது. அவர் என்றென்றும் இருக்கிறார்.” என கூறி தமது இரங்கலை தெரிவிக்கிறார்.

நடிகர் சித்தார்த், ஆர்.ரவீந்திரன் பிரசாத் இயக்கிய 'நவரசா' ஆந்தாலஜி படத்தின் ஒரு கதையில் நடித்துள்ளார். கடைசியாக 'அருவம்' (2019) படத்தில் சித்தார்த் நடித்துள்ளார். இதேபோல் கமல்ஹாசன் நடித்த ஷங்கரின் 'இந்தியன் 2', கார்த்திக் ஜி கிருஷ் இயக்கிய 'டக்கர்' மற்றும் பிற திரைப்படங்களும் அவர்வசம் உள்ளன.

ALSO READ: "இயக்குநர் லிங்குசாமி மீது சீமான் புகார்!".. எழுத்தாளர்கள் சங்க சார்பில் கே.பாக்யராஜ் பரபரப்பு விளக்கம்!

தொடர்புடைய இணைப்புகள்

Siddharth angry reply for comparing dilipkumar and akshaykumar

People looking for online information on Dilip Kumar, RIPDilipKumar, Siddharth will find this news story useful.