"எனக்கு அதை, யார்ட்ட SHARE பண்றதுன்னே தெரியாது!".‌. சாய் பல்லவி உடைத்த சீக்ரெட்.! #SHYAMSINGHAROY

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானி இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கும் படமான ஷியாம் சின்ஹா ராய். வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Advertising
>
Advertising


ஷியாம் சின்ஹா ராய் படம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகஉள்ள நிலையில், பிரதேயமாக நேர்காணல் ஒன்று எடுக்கப்பட்டது. அதில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர் படத்தின் நானி மற்றும் நாயகியான சாய் பல்லவி. இந்த படத்தில் சாய் பல்லவி, க்ரிதி ஷெட்டி, மடோனா செபஸ்டியன் போன்ற பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்கியுள்ளார் Rahul Sankrityan. மிகப்பெரிய பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.

நான் ஈ படத்திற்கு பிறகு இவரது படத்திற்கு பெரும் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பான புரோமோஷன் வேலைகள் தற்போது நடந்து வருகின்றது. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நானி மற்றும் சாய் பல்லவியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது எப்படி உணர்கிறீர்கள்? என்று கேட்ட கேள்விக்கு தயங்காமல் பதில் அளித்தனர் இருவரும் ரொமான்ஸ் சீன் என்று எங்களுக்கு தோன்றும் அளவிற்கு அங்கு ஏதும் நடக்கவில்லை. நாங்கள் இருவரும் ரொம்ப சாதாரணமாகத்தான் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தோம்.

ஷியாம் சின்ஹா ராய் படத்தின் கதையை கேட்கும் போதே, எப்படி நடிக்க வேண்டும் என்று உணர்ந்து அந்த கதாபாத்திரமாக மாறி நடிக்க தொடங்கினேன். ஒவ்வொரு கேள்விக்கும் வெட்கப்பட்டு வெட்கப்பட்டு பதிலளித்த சாய்பல்லவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கண்டிப்பாக இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டம் ஷியாம் சின்ஹா ராய் கொண்டாட்டமாக இருக்கும் என்று பெருமையுடன் கூறினார்கள். இருவருக்கும் அருமையான ஃப்ரெண்ட்ஷிப்பில் இருப்பதாக சாய் பல்லவி கூறினார். தான் என்ன பேச விரும்பினாலும் அதை முதலில் நானி இடமே முதலில் கூறியதாகவும்,கலகலப்பாக பல தகவல்களை பகிர்ந்தார்.

ரொம்பவும் ஆர்வமாகவும், சந்தோஷமாகவும் இந்த கேரக்டரில் நடித்ததாக இருவரும் சந்தோசமாக கூறினார்கள். படத்தில் நடித்த சில காட்சிகள் தன் சொந்த வாழ்க்கையில் நடந்தது போலவே இருப்பதாக சாய் பல்லவி கூறியுள்ளார்.அப்படி என்ன இருக்கிறது என்று படத்தை பார்த்த பிறகு தான் ரசிகர்களுக்கு தெரியவரும். அனைத்து படங்களும் பழமொழியில் வெளிவர ஏற்றதாக இருக்காது. ஆனால், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்றும் இது கண்டிப்பாக ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என்றும் தமிழில் வெளிவர இது ஏற்ற படம் தான் என்றும் நானி கூறினார். இதுபோல் பல சுவாரஸ்யமான தகவல்களை நேர்காணல் மூலம் பகிர்ந்து கொண்டனர்.

"எனக்கு அதை, யார்ட்ட SHARE பண்றதுன்னே தெரியாது!".‌. சாய் பல்லவி உடைத்த சீக்ரெட்.! #SHYAMSINGHAROY வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Shyam Singha Roy Naani and SaiPallavi Exclusive interview

People looking for online information on ஷியாம் சின்ஹா ராய், Naani, Saipallavi, Shyam Singha Roy will find this news story useful.