"எண்ணற்ற ஆசீர்வாதங்களுக்கு நன்றி".. பாடகி ஸ்ரேயா கோஷல் வீட்ல நல்ல விஷயம்.. உருக்கமான ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய அளவில் பிரபல பின்னணி பாடலி ஸ்ரேயா கோஷலுக்கு பல மொழிகளிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு.

அவருடைய குரலுக்கு மயங்காத இசை பிரியர்களே இல்லை என்று சொல்லலாம். ஏ. ஆர். ரஹ்மான் இசையில் 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் இடம்பெற்ற 'முன்பே வா அன்பே வா' பாடலை பாடிய சமயத்தில் கோலிவுட் ரசிகர்களை கவர்ந்த ஸ்ரேயா கோஷல் மொத்தமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், நேபாளம், பாகிஸ்தானி, துலு, பெங்காலி, போஜ்பூரி என பல மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். இவற்றுள் இதுவரை 4 தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

2015ஆம் ஆண்டு தமது நீண்ட நாள் காதலர் ஷிலாதித்யா என்பவரை திருமணம் செய்த ஸ்ரேயா கோஷல், முன்னதாக தாம் கர்ப்பமாக இருப்பதை போட்டோஷூட் செய்து சமூக வலைதளங்களில் ஸ்ரேயா கோஷல் பதிவிட்டிருந்ததை அடுத்து அந்த புகைப்படங்கள் வைரலாகியிருந்தன. இந்நிலையில் ஸ்ரேயா கோஷல் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கும் தகவலை அறிவித்துள்ளார்.

அதன்படி, “கடவுள் எங்களுக்கு விலைமதிப்பில்லாத ஆண் குழந்தையை தந்து ஆசீர்வதித்துள்ளார். இதுநாள் வரை நான் அனுபவிக்காத ஒரு உணர்வு இது. ஷிலாதித்யா, நான் மற்றூம் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளோம். எங்கள் குழந்தைக்கான உங்கள் அனைவரின் எண்ணற்ற ஆசிர்வாதங்களுக்கு நன்றி” என்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் ஸ்ரேயா கோஷல்,  “சீக்கிரமே அம்மாவாக போகிறேன் . குட்டி ஸ்ரேயா ஆதித்யா கம்மிங்.. இந்த மகிழ்ச்சி செய்தியை உங்களிடம் பகிர்வதில் எனக்கும், என் கணவருக்கும் டபுள் ஹாப்பி” என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு குழந்தை பிறந்துள்ளதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Shreya ghoshal blessed us with baby boy hear felt tweet

People looking for online information on Shreya Ghoshal, Shreya Goshal will find this news story useful.