அருண் விஜய் - ஹரி இணையும் #AV33 படத்தின் அடுத்த மாஸான சூப்பர் அப்டேட்!!! என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது மாமாவான இயக்குனர் ஹரியுடன் அருண் விஜய் முதல் முறையாக இணையும் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார், இவர்களுடன் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ராதிகா சரத்குமார்,புகழ், அம்மு அபிராமி மற்றும் 'கேஜிஎஃப்' புகழ் கருடா ராம் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்போது 'ஏ.வி 33' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் சில நாட்களுக்கு முன் மீண்டும் தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே காரைக்குடி பகுதிகளிலும் நடந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பழனியில் இன்று (23.08.2021) தொடங்குகிறது. மேலும் இந்த படப்பிடிப்பு செப்டெம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் அருண் விஜய் ராமேஸ்வரத்தில் இருந்து, பழனி செல்லும் போது பாமபன் பாலத்தில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Shooting update for director Hari Arun Vijay movie #AV33

People looking for online information on Arun Vijay, Hari, Priya Bhavani Shankar will find this news story useful.