"தயவு செஞ்சு புரிஞ்சிட்டு பேசு".. TASK முடிஞ்ச பிறகு கண்ணீர் விட்டு கதறிய ஷிவின்... என்ன ஆச்சு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertising
>
Advertising

Also Read | பிரபல இயக்குனருடன் கைகோர்த்த நடிகர் கார்த்தி.. வெளியான சூப்பர் தகவல்!!.. ஷூட்டிங் எப்போ?

அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

சமீபத்தில் மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.

இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் எந்த போட்டியாளர் முதல் ஆளாக இறுதி சுற்றுக்கு முன்னேறுவார் என்பதை அறியவும் ஆவலாக உள்ளனர்.

இதில் Ticket To Finale சுற்றில் இரண்டாவது டாஸ்க்காக, Debate டாஸ்க் அரங்கேறி இருந்தது. இதில் இரண்டு போட்டியாளர்கள் மாறி மாறி விவாதம் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் முன்னே இருக்கும் பல்புகளில் அதிகம் யாருக்கு எரிகிறதோ அவரே வெற்றியாளர் என்றும் பிக் பாஸ் தெரிவிக்கிறார். இதில் பல போட்டியாளர்கள் இடையே நடந்த விவாதங்கள் பெரிய அளவில் விறுவிறுப்பை எகிற வைத்திருந்தது.

இதற்கு மத்தியில் Debate டாஸ்க் முடிந்த பிறகு ஷிவின் கண்ணீர் விட்டு அழுத விஷயம், பெரிய அளவில் போட்டியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Debate டாஸ்க்கின் இறுதி சுற்றிற்கு விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர். அப்போது இருவரும் தாங்கள் பெஸ்ட் என்பதை நிரூபிக்க சில விஷயங்களை முன் வைத்திருந்தனர். இதற்கு மாறி மாறி எதிர் கருத்துக்களை தெரிவித்து கொண்டே போக, அவர்களின் விவாதங்கள் பெரிய அளவில் அனல் பறக்கும் வகையில் சென்று கொண்டிருந்தது. நீண்ட நேரம் இந்த விவாதம் நீடித்திருந்த நிலையில், இறுதியில் ஷிவின் வெற்றியும் பெற்றிருந்தார்.

அப்படி ஒரு சூழலில், எதிர்த்து பேசும் நபரை பேச விடாமல் செய்வது தான் ஷிவின் வேலை என ADK கூற, இது பற்றி பல போட்டியாளர்களும் கருத்து தெரிவித்தனர். இதனை கேட்டு தன்னை பெர்சனலாக தாக்குவதாக ஷிவின் கூற, பலரும் ஷிவினின் விளையாட்டு குறித்து நிறைய விமர்சனங்களையும் முன் வைக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தன் மீது முன் வைக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து நினைத்த ஷிவின், கண்ணீர் விடவும் தொடங்குகிறார். அப்போது அமுதவாணன், அசிம் உள்ளிட்டோர், அது விவாதத்தில் பேசிய விஷயங்கள் என்றும் அதை பெர்சனலாக எடுக்க வேண்டாம் என்றும் கூறி தேற்றுகின்றனர். இதன் பின்னர், அங்கே வரும் ரச்சிதா, நீ அழ வேண்டிய அவசியம் இல்ல என்றும் கூறுகிறார். அதற்கு நானே கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டு இதில் இருந்து வெளியே வருகிறேன், தயவு செய்து புரிந்து கொண்டு பேசு என்றும் ரச்சிதாவிடம் ஷிவின் குறிப்பிடுகிறார்.

Also Read | அஜித், விஜய் இணைந்து நடித்த படம் ரீ ரிலீஸ்.. வாரிசு Vs துணிவு நடுவே பிரபல Theatre-ன் சூப்பர் அப்டேட்!!

தொடர்புடைய இணைப்புகள்

Shivin break down in tears after debate task with vikraman

People looking for online information on Amudhavanan, Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Tamil, Shivin, Vikraman will find this news story useful.