"உங்ககிட்ட பேச விருப்பமில்ல".. ADK பேச்சை எதிர்த்த பிறகு வெளியேறிய ஷிவின்.. TASK வந்தாலே கலவரம் தான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன தான் கலகலப்பாக போட்டியாளர்கள் இருந்து வந்தாலும் டாஸ்க் என வந்து விட்டால் வீடே ரெண்டாகி விடுவது போல பிரச்சனைகளும் புதிது புதிதாக உருவாகிறது.

Advertising
>
Advertising

Also Read | "நான்தாங்க பாலிவுட் நடிகர்.." - பேட்டியாளரிடம் நினைவூட்டிய ரன்வீர்..! சுவாரஸ்ய பின்னணி

அந்த வகையில், கோர்ட் டாஸ்க் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து சில பரபரப்பு சம்பவங்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறி வருகிறது.

முன்னதாக பொம்மை டாஸ்க் மற்றும் ஃபேக்டரி டாஸ்க் இடையே பல குழப்பங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள்  அரங்கேறி இருந்தது. இதன் பெயரில் அடுத்தடுத்து பல போட்டியாளர்கள் இடையே கூட சண்டை வெடித்து கலவரத்தையே பிக்பாஸ் வீட்டிற்குள் உருவாக்கி விட்டது. இதே போல தான் சமீபத்தில் நடந்து முடிந்த ராஜா ராணி டாஸ்க் இடையே கூட அசீம் மற்றும் விக்ரமன் மோதிக் கொண்டது உள்ளிட்ட பல சலசலப்பு சம்பவங்கள் நடந்திருந்தது.

டாஸ்க் என்று வந்து விட்டால் பிக்பாஸ் வீட்டிற்குள் தீப்பறக்கும் அதே வேளையில், சில போட்டியாளர்களும் வார இறுதியில் வெளியேறி இருந்தனர். ஜிபி முத்து தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என அங்கிருந்து இரண்டாவது வாரம் கிளம்பி விட்டார். இதற்கடுத்து, சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து அடுத்தடுத்து வெளியேறி இருந்தனர்.

நிவாஷினி வெளியேறியதை தொடர்ந்து, சமீபத்தில் நடந்த நாமினேஷன் இந்த சீசனின் முதல் Open நாமினேஷனாக இருந்தது. சக போட்டியாளர்கள் மத்தியில் தாங்கள் எலிமினேஷன் சுற்றுக்கு நாமினேட் செய்யும் 2 போட்டியாளர்கள் பெயரை அறிவிக்க வேண்டும். இதில் அசீம் மற்றும் தனலட்சுமி ஆகியோர் ஒருவரை ஒருவர் நாமினேட் செய்ததுடன் அதற்கு அவர்கள் சொன்ன காரணங்களும் அதிகம் வைரலாகி இருந்தது.

இந்த நிலையில், தற்போது ஆரம்பித்துள்ள கோர்ட் டாஸ்க்கில் அடுத்தடுத்து சில பிரச்சனைகளையும் ஆரம்பித்து வைத்துள்ளது.

புதிய டாஸ்க்கின் படி, பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நீதிமன்றம் என்ற பெயரில் இந்த டாஸ்க் ஆரம்பமாகும் நிலையில், ஒவ்வொருவராக தங்களது வழக்கு என்ன என்பதை மெயின் டோர் கேமரா முன்பு பதிவு செய்கிறார்கள். இதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்படுகிறது.

மேலும் தற்போது நீதிபதியாக ADK இருக்கிறார். ஒரு பக்கம், விக்ரமனுக்கான வழக்கறிஞராக ஷிவினும், அமுதவனாணுக்கான வழக்கறிஞராக அசீமும் இருப்பது தெரிகிறது. அப்போது, ஒரு வக்கீலாக கரெக்ட்டான பாயிண்ட்டை எடுத்து பேச வேண்டியது அவர்கள் கடமை என ADK சொல்கிறார். இதன் பின்னர் தனது கருத்தை பேச முற்படுகிறார் ஷிவின். ஆனால், வழக்கே முடிந்து விட்டது என ஷிவினை ADK பேசவிடவில்லை. மறுபடியும் ஷவின் பேச முற்பட, இது நீதிமன்றம், மரியாதை இல்லாமல் பேசினால் வெளியே போகவும் ஷிவினை ADK எச்சரிக்கிறார்.

இதன் பின்னர் வெளியே கிளம்பி செல்லும் ஷிவின், தொடர்ந்து தனது நிலைப்பாட்டை தெரிவித்து கொண்டே போகிறார். ஒரு நீதிபதியாக உங்களிடம் பேச விருப்பமில்லை என கூறிக் கொண்டு ஷிவின் கிளம்பி போகிறார். நீதிமன்ற டாஸ்க் அறிவித்த நாளிலேயே அடுத்தடுத்து பரபரப்பு சம்பவங்கள் உருவாகி உள்ளது என்றும் பார்வையாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | "இந்தா வந்துருச்சுல Court டாஸ்க்கு".. ஆரம்பமே சும்மா தீப்பறக்குது.. விக்ரமன் மீது பாய்ந்த வழக்கு!!

தொடர்புடைய இணைப்புகள்

Shivin argument with judge adk in court task bigg boss house

People looking for online information on ADK, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Shivin, Vijay Television, Vijay tv will find this news story useful.