"கதிர் எதுக்கு என்கிட்ட சொல்லணும்?".. "பிக் பாஸ் வீட்டில் அழுதது".. உடைக்கும் ஷிவின்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் நடைபெற்று வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன், மிகவும் அமோகமாக நடந்து முடிந்திருந்தது.

Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மொத்தம் 21 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்தனர். அதில், மக்கள் மத்தியில் பிரபலமான பலர் இருந்த சூழலில், அதிக அறிமுகம் இல்லாத ஷிவின் கூட பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தார். தான் பேசும் விஷயத்தில் நிலையாக இருக்கும் ஷிவின், யாராக இருந்தாலும் தனது கருத்துக்களை ஆணித்தரமாக பேசக்.கூடியவர்.

இதனால், ஷிவினுக்கு ரசிகர்கள் அதிகரித்ததுடன் மட்டுமில்லாமல், Freeze டாஸ்க்கில் வந்த போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் தங்களின் மகள் என குறிப்பிட்டு பேசி இருந்ததும் அவரை மனம் நெகிழ வைத்திருந்தது. இதற்கிடையில், பிக் பாஸ் 6 ஆவது சீசனில் Finale வரை முன்னேறி இருந்த ஷிவின், 3 ஆவது இடத்தையும் பிடித்திருந்தார்.

தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் தற்போது வெளியே வந்துள்ள ஷிவினுக்கு மக்கள் ஆதரவும் அற்புதமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும், சக போட்டியாளர்கள் குறித்தும் நிறைய கருத்துக்களை ஷிவின் பகிர்ந்து கொண்டார்.

Image Credit : Vijay Television

கதிருக்கும் ஷிவினுக்கும் இடையான Bonding குறித்தும், அவருக்காக கண்ணீர் விட்டது பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு விளக்கம் கொடுத்த ஷிவின், "நான் அப்பவே விக்ரமன்கிட்ட அந்த சூழ்நிலை பத்தி பேசிட்டேன். எனக்கு நடக்கக் கூடிய விஷயங்களே, நானே வெளிய இருந்து மூணாவது ஆள் மாதிரி பார்த்து, நானே ஃபீல் பண்ணி அழுவேன். அந்த Situation கூட அப்படித்தான். இந்த மாதிரி எனக்கு கடந்தகால அனுபவங்கள் இருக்கு.

அந்த டைம்ல என்னால முன்னாடி எடுத்துட்டு போக முடியாதுன்னு நெறய தடவ ஃபீல் பண்ணி இருக்கேன். அன்னைக்கி நடந்த அந்த ஒரு விஷயத்துக்காக கிடையாது. என்னோட சூழ்நிலையை நெனச்சு தான் நான் ஃபீல் பண்ணேன்னு தவிர அதத்தாண்டி வேற ஒண்ணுமில்ல" என்றார். இதனைத் தொடர்ந்து, கதிரவன் பெற்றோர் மற்றும் நெருங்கிய தோழி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து போன பிறகு, அமுதவாணன் பாட்டு பாடி கலாய்த்து தன்னை தேற்ற அவர் முயற்சி செய்தது பற்றியும் ஷிவின் பேசி இருந்தார்.

தொடர்ந்து, கதிரவன் முன்பே ஷிவினிடம் அனைத்தையும் பேசி சரி செய்திருக்கலாம் என்ற கருத்துக்கள் வெளியே பரவலாக இருந்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஷிவின், "அவரு எதுக்கு எங்கிட்ட வந்து சொல்லணும். அதுக்கான அவசியமே இல்லைல்ல. நானே நெறய தடவ கதிர்கிட்ட ஸாரி சொல்லி இருக்கேன். என்னால எதாவது discomfort வந்திருந்தாலோ, இல்லைன்னா வெளிய போயிட்டு வந்துச்சுன்னா, அது இப்ப நடக்குதுன்னு நெனைக்கிறேன். அதுக்காக நான் அட்வான்ஸாவே ஸாரி கேட்டுட்டேன்" என தெரிவித்தார்.

Image Credit : Vijay Television

அதே போல, கதிரவனுக்கு இருக்கும் கேர்ள் ஃப்ரெண்ட் குறித்தும் ஷிவின் வெளிப்படையாக பேசி இருந்தார்.

"கதிர் எதுக்கு என்கிட்ட சொல்லணும்?".. "பிக் பாஸ் வீட்டில் அழுதது".. உடைக்கும் ஷிவின் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Shivin about bonding with kathirravan in bigg boss house

People looking for online information on Bigg boss, Kathirravan, Shivin will find this news story useful.