VIDEO: 'அந்த' ஊரு பொண்ணா நீங்க?... ஷிவானிக்கு சமூக வலைதளங்களில் 'பெருகும்' ஆதரவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து போட்டியாளர்கள் சொல்லும் நிகழ்வு நேற்றும் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்றது. இதில் ஜித்தன் ரமேஷ், ஷிவானி நாராயணன், சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா சம்பத் ஆகிய நால்வரும் தங்களது சொல்லப்படாத கதைகளை பகிர்ந்து கொண்டனர். மற்ற மூவரும் கொஞ்சம் எமோஷனலாக பேச, நிஷா சொல்லியது போல ஷிவானி பேசியது ப்ரோமோ அளவுக்கு கூட தேறவில்லை.

இரத்தின சுருக்கமாக தன்னைப்பற்றி எடுத்துரைத்தார். சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர். அம்மா-அப்பாவிடம் அடம்பிடித்து சென்னைக்கு குடும்பத்துடன் குடியேறி இருக்கிறார். அம்மா தான் ரொம்ப சப்போர்ட். 8-வது படிக்கும் போதிருந்து சோசியல் மீடியா யூஸ் பண்றேன். விஜய் டிவியில நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து விஜய் டிவிக்கு ரெண்டு சீரியல், ஜீ தமிழில் ஒரு சீரியல் பண்ணி இருக்கேன்.

லாஸ்ட் இயர் பிக்பாஸ் வாய்ப்பு கெடைச்சது. வரமுடில. இந்த டைம் கூப்பிட்டாங்க வந்துட்டேன். ஒரு காரணமா தான் உள்ள வந்து இருக்கேன் என தெரிவித்தார். இந்த நிலையில் இவரின் பேச்சு தெளிவாக இருந்ததாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். சொந்த ஊர் சாத்தூர் என்று ஷிவானி சொல்லியதும், நம்ம ஊரு பொண்ணாம்மா நீ என அந்த ஊர்க்காரர்கள் ஷிவானிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் ஷிவானி ஆர்மி உற்சாகம் அடைந்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Shivani Narayanan shared her past, twitter Reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.