காணாமல் போன ஷிவானியின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்... ரசிகர்கள் அதிர்ச்சி... காரணம் என்ன..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிக எதிர்பார்ப்போடு களமிறங்கிய போட்டியாளர்களுள் ஒருவர் ஷிவானி. மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் அவருக்கு இருந்தது. இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட அவரை 2 மில்லியன் மக்கள் ப்பாலோ செய்கின்றனர். இதற்கெல்லாம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது அவரது ஊரடங்கு போட்டோ ஷூட்கள் தான். தினமும் 4 மணிக்கு வெளியாகும் அவரது போட்டோவிற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். அந்த புகைப்படங்களும் மிகவும் வைரலானது. இப்படி ஷிவானிக்கு புகழும், பேரும் வந்து சேர்ந்தது.

அதன் பின்பு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார். ஆரம்பம் முதலே அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாலும் ஷிவானிக்கு திருப்புமுனையாக அமைந்தது, அவரது தாயின் வருகைதான். அதற்குப் பிறகு அவர் பல விஷயங்களில் தனது கருத்தை சரியாக பதிவிடுவதும், டாஸ்க்குகளில் திறமையை வெளிப்படுத்துவதையும் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் தற்போது ஷிவானியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ஊரடங்கு போட்டோஷூட் புகைப்படங்கள் பலவும் காணாமல் போயிருக்கின்றன. இதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஆரி கூட ஒருமுறை ஷிவானியிடம் இது பற்றி கேட்டிருக்கிறார் "நீங்கள் எதற்காக தினமும் நான்கு மணிக்கு போட்டோ போடுகிறீர்கள். அதற்கு காரணம் என்ன. ரசிகர்களுக்கு என்ன சொல்ல வருகிறீர்கள்" என்று கேட்க, ஷிவானி "நான் எந்த கேம் பிளானுடனும் வரவில்லை" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Aari, Shivani

தொடர்புடைய இணைப்புகள்

Shivani instagram photos deleted காணாமல் போன ஷிவானியின் புகைப்படங்கள்

People looking for online information on Aari, Shivani will find this news story useful.