அடுத்து 2 முக்கியமான அப்டேட்.. அறிக்கை வெளியிட்டு விலகிய `செவ்வந்தி' சீரியல் நடிகர்..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி சீரியலில் இருந்து நடிகர் நித்தின் விலகி இருக்கிறார்.

Advertising
>
Advertising

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த முதன்மை தொடர்களில் ஒன்று செவ்வந்தி. இந்த தொடரில் நடிகர் ராகவ் கதாநாயகனாக நடித்திருந்தார். அதன் பிறகு அவர் இறந்தது போல கதை நகர்ந்துவிட்டது. இதனால் அவர் அந்த தொடரில் தற்போது தொடர்ந்து நடிக்கவில்லை. இதில் கதாநாயகியாக திவ்யா ஸ்ரீதர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவர்தான் நடிகர் நிதின் க்ரிஷ். முன்னதாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த என்றென்றும் புன்னகை சீரியலில் ஆகாஷ் எனும் கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் புகழ்பெற்ற இவர் செவ்வந்தி சீரியலில் கார்த்திக் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில்தான் திடீரென அந்த தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார். இது குறித்து தெரிவித்திருக்கும் அவர் புது புது விஷயங்களை நோக்கி பயணிக்கும் தருணம் என்பதால் இரண்டு முக்கியமான அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Sevvanthi serial actor nithin Krish opted out from Serial

People looking for online information on Nithin Krish, Sevvathi will find this news story useful.