“துணை என்பது கானல் நீர்.. தனியாகத்தான் வந்தோம்.. தனியாக போவோம்” - செல்வராகவன் வைரல் பதிவு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் செல்வராகவன் பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது. காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களை இயக்கி ஹிட் இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன்.

Advertising
>
Advertising

Also Read | Rachitha : அம்மாவ பார்த்ததும் உணர்ச்சி பொங்க அழுத ரச்சிதா.. கலங்கவைத்த Bigg Boss ப்ரோமோ..

பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவன், கடைசியாக தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கிய செல்வராகவன், தற்போது மோகன்.ஜி இயக்கத்திலான பகாசூரன் படத்தில் நடித்துள்ளார். முன்னதாக பீஸ்ட், சாணி காயிதம் ஆகிய திரைப்படங்களிலும் செல்வராகவன் நடித்திருந்தார். இதில் சாணி காயிதம் படத்தில் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார்.

இவர் தமது முதல் மனைவியும், நடிகையுமான சோனியா அகர்வாலுடன் விவாகரத்து செய்து, பின்னர் தமது உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலி செல்வராகவனை 2011 -ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கீதாஞ்சலி செல்வராகவன் மாலை நேரத்து மயக்கம் எனும் திரைப்படத்தை இயக்கியவர். அந்த படத்துக்கு செல்வராகவன் கதை எழுதியிருந்தார். இவருக்கு ஒரு மகள் மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், திடீரென ஒரு ட்வீட்டை இயக்குநர் செல்வராகவன் போட்டிருக்கிறார்.

அந்த ட்வீட்டில் இயக்குநர் செல்வராகவன் “தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்.” என பதிவிட்டுள்ளார்.

Also Read | ‘அம்மா வரல!’.. கண்ணீர் விட்டு அழுத ஷிவின்! அவரை பார்க்க வந்தது யாரு தெரியுமா..? bigg boss 6 tamil

தொடர்புடைய இணைப்புகள்

Selvaraghavan tweet துணை என்பது கானல் நீர் செல்வராகவன் ட்வீட்

People looking for online information on Bakasuran, Director selvaraghavan, Selvaraghavan will find this news story useful.