BGM 8: “ஒரு நாள் நீ கண்டிப்பா புரிஞ்சுக்குவ… இப்போ புரியுது”… செல்வராகவனிடம் சொன்ன தனுஷ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் செல்வராகவன் Behindwoods Gold Medals நிகழ்வில் கலந்துகொண்டு பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | படத்தில் நடித்த குழந்தைகள் வளர 7 வருஷம் காத்திருந்த பெண் இயக்குனர்… மீண்டும் 'ஷூட்டிங்’

நடிகராக செல்வராகவன்…

ராக்கி படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இரண்டாவது படமான ‘சாணிக்காயிதம்’சமீபத்தில் வெளியானது. இந்த படமும் ராக்கி போலவே வன்முறைக் காட்சிகளை அதிகமாகக் கொண்டுள்ள படமாகவே உருவாகி இருந்தது. அமேசான் ப்ரைம் ஓடிடியில் நேரடியாக ரிலீஸான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்தின் பேசப்பட்ட விஷயங்களில் செல்வராகவனின் நடிப்பும் அமைந்தது. செல்வராகவன் அறியப்பட்ட இயக்குனராக இருந்த நிலையில், நடிகராக அறிமுகமானது பெரிய அளவில் பேசப்பட்டது.

அடுத்தடுத்த படங்கள்…

ஆனால் சாணிக்காயிதம் திரைப்படத்துக்கு முன்பே செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானது. அதிலும் செல்வராகவனின் நடிப்பு கவனிக்கப்பட்டது. அவர் பேசும் வசனங்கள் மீம்களாகவும் பகிரப்பட்டு ட்ரண்ட் ஆகின. அடுத்து இப்போது மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசூரன்’ திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

நடிப்பு எப்படி இருக்கிறது…

இந்நிலையில் சமீபத்தில் Behindwoods Gold Medal விருதுகளில் கலந்துகொண்ட செல்வராகவனிடம் “நீங்கள் பெர்ஃபெக்ஷன் பார்க்கும் இயக்குனராக அறியப்படுகிறீர்கள். இப்போது நடிகராகிவிட்ட நிலையில் எப்போதாவது நடிப்பது கஷ்டம் என நினைக்கிறீர்களா” எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “ஆமாம் புரிந்துகொண்டேன். முன்பு தனுஷ் சொல்வார் ‘ஒருநாள் நீ கண்டிப்பா புரிஞ்சுக்குவ… எவ்ளோ எங்கள படுத்தி எடுக்குறன்னு’… இப்போ என் நடிப்ப பார்த்து அவர் நல்லா இருப்பதாகக் கூறினார்” எனக் கூறியுள்ளார்.

Also Read | சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் T ராஜேந்தர்… சந்தித்து நலம் விசாரித்த கமல்… latest pic

தொடர்புடைய இணைப்புகள்

Selvaraghavan talked about dhanush comment on acting

People looking for online information on செல்வராகவன், தனுஷ், Dhanush comment, Selvaraghavan, Selvaraghavan talked about dhanush will find this news story useful.