"நண்பர்களே.. அந்த நேர்காணலில்..".. ராமசாமி சர்ச்சை.. 'மன்னிப்பு' கேட்டு செல்வராகவன் விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை.

திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா காசண்ட்ரா, நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சாத்தானுக்கும் கடவுளுக்குமான போராக இந்த படத்தில் கதை சொல்லப்படுகிறது.

இதற்கு செல்வராகவன் பதில் சொல்ல தாமதமாகிறது. எனினும் புன்னகை செய்தபடி இருந்துள்ளார். நீங்கள் பதில் சொல்ல வேண்டுமென்றில்லை. ஒரு குறிப்பு மொழியை உதிர்த்தாலே போதும் என்று  கூறுகிறார். சில நொடிகளில் செல்வராகவன் சிரித்தபடி யெஸ் என்கிறார். இதை பலரும் சுட்டிக்காட்டவே, தற்போது செல்வராகவன், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், “நண்பர்களே ! அந்த நேர் காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்.” என்று ட்வீட் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே முன்னதாக விகடனின் நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்டபோது ராமசாமி என்பது தமது தாத்தாவின் பெயர் என்று செல்வராகவன் பதில் அளித்த வீடியோவும் பரவி வருகிறது. 

ALSO READ: 'அடுத்த படத் தயாரிப்பு பணியில் பாலா!'.. அந்த பட ஹீரோவே பகிர்ந்த வைரல் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Selvaraghavan over controversial remark in interview செல்வராகவன்

People looking for online information on Nenjam Marappathillai, Nenjam Marappathillai Tamil, Selvaraghavan, Selvaraghavan Interview, Trending will find this news story useful.