"சூர்யாவை தனிநபர் என மிரட்ட வேண்டாம்.. எங்கள தாண்டி தான் நெருங்க முடியும்!".. சீமான் அதிரடி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக திரைப்பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சூர்யாவின் கருத்துக்கு எதிராக எழும் கருத்துக்களுக்கு எதிராகவும், சூர்யாவை விவாதத்துக்கு அழைப்போருக்கு பதில் அளிக்கும் வகையிலும் சீமான் பேசியுள்ளார்.

அதாவது சூர்யாவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூர்யாவை தனிநபரென நினைத்து அவரை அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும்” என பாஜகவை குறிப்பிட்டு சீமான் பதில் அளித்துள்ளார்.

மேலும் சூர்யாவை விவாதத்துக்கு அழைக்கும் அதே மேடையில் தானும் இருக்க, தன்னோடும் தன் இயக்கத் தம்பிகளுடனும் விவாதத்தை எதிர்கொள்ள தயாரா? என்றும் அறைகூவல் விடுத்துள்ளார். 

குறிப்பாக “எங்களை தாண்டித்தான் சூர்யாவை நெருங்க முடியும்” என சீமான் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: “டேய்.. சாவடிச்சிடுவேன்.. ”.. திலீப்குமார் குறித்த கமெண்ட். கடுமையாக சாடி சித்தார்த் ட்வீட்!

தொடர்புடைய இணைப்புகள்

Seeman angry against Threat for Suriya cinematograph bill

People looking for online information on Cinematograph bill, Seeman, Suriya, Trending will find this news story useful.