எதுக்கு 'வந்தோம்'னு மறந்துட்டாங்க... அனிதாவுக்கு 'பெருகும்' ஆதரவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் போட்டியாளர்களாக ஆரி, பாலாஜி, அனிதா, சனம், ரம்யா பாண்டியன் ஆகிய 5 பேரை ரசிகர்கள் கருதுகின்றனர். ஆரம்பத்தில் அனிதாவின் செயல்களால் எரிச்சலான ரசிகர்கள் கூட தற்போது அவருக்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். கடந்த வாரம் நாமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆன அனிதா தனக்கு பதிலாக சம்யுக்தாவை கோர்த்து விட்டார்.

யாரும் எதிர்பாராத விதமாக சம்யுக்தா வீட்டைவிட்டு வெளியேற ஜித்தன் ரமேஷ் கேப்டன் ஆகி இன்னும் ஒரு வாரத்தை வீட்டுக்குள் உறுதி செய்து விட்டார். அதனால் இந்த வாரம் அவர் நாமினேஷன் பட்டியலில் இடம்பெறவில்லை. தற்போது நாமினேஷன் பட்டியலில்  ஆரி, அனிதா, சனம், ஷிவானி, ஆஜீத், ரம்யா, நிஷா ஆகியோர் இடம்பெற்று இருக்கின்றனர்.

இதில் அனிதா, ஷிவானியை நாமினேட் செய்தபோது அவங்க எதுக்கு வந்துருக்காங்க பிக்பாஸ் அப்படிங்கிறதஅவங்க மறந்துட்டாங்க என காரணம் சொன்னார். அனிதா சொன்ன காரணங்கள் சரியானது.  மேலும் சமீபகாலமாக அவர் விளையாடும் தன்மை ஆகியவை மாறியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

#SaveAnitha Netizens Extend their Support for Anitha Sampath

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.