சற்குணம் - அதர்வா இணையும் புதிய படத்தின் செம அப்டேட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

களவானி, வாகைச்சூடவா படங்களின் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில்,  அதர்வா முரளி, ராஜ்கிரண் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் இன்று தொடங்கியுள்ளது. சண்டி வீரன் படத்திற்கு பிறகு இவர்கள் மீண்டும் இணைகிறார்கள்.

லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் “Production No.22” என தற்காலிகமாக இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.  தற்போதைய கொரோனா தொற்று சூழ்நிலையில்,  படக்குழு சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி படப்பிடிப்பை மேற்கொள்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக 50 நாட்களில்  முடிக்க, படக்குழு முடிவு செய்துள்ளது. திருவையாறு பகுதியை சுற்றி நடக்கும் குடும்ப டிராமாவாக இந்தப்படம் உருவாகிறது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைக்கிறார், லோகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார், ராஜா முஹம்மது எடிட்டிங் செய்கிறார்.

அதர்வாவுக்கு ஜோடியாக ஆஸ்மிகா ரெங்கநாத் நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம், முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் குடும்ப பொழுதுபோக்கு  படமாக உருவாகிறது.  இப்படத்தில் அதர்வா ராஜ் கிரணுடன், ராதிகா சரத்குமார், ஜேபி, R.K. சுரேஷ், சிங்கம் புலி, கன்னட நடிகர் ரவி காலே,  சத்ரு, பால சரவணன், ராஜ் அய்யப்பா, G.M. குமார் மற்றும் பல முன்னணி நடிகர்கள்  இணைந்து நடிக்கின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Sargunam atharva new movie shooting started at tanjore

People looking for online information on Atharvaa Murali, Lyca Productions, Sargunam will find this news story useful.