‘நான் எடுத்துருவேன் GUYS!’.. ஹவுஸ்மேட்ஸின் பேசுபொருளான சரத்குமார் கொடுத்த பணப்பெட்டி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடிகர் சரத்குமார் திடீரென என்ட்ரி கொடுத்தார்.

Advertising
>
Advertising

Sarathkumar:

உள்ளே வந்தவர் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு ஹவுஸ் மேட்டாக இணையப் போகிறாரா? என்று ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் வந்தவர் கொடுத்த சர்ப்ரைஸ், அனைவரிடையே புதிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதன்படி சரத்குமார் வரும்பொழுது தம்முடைய கையில் ஒரு பெட்டியை எடுத்து வந்தார். அந்த பெட்டியை திறந்து வைத்து, சரத்குமார் பேசத்தொடங்கினார். அந்தப் பெட்டியில் மூன்று லட்சம் ரூபாய் என்று எழுதப்பட்டு இருந்தது.

‘எல்லாரும் வெற்றி பெற முடியாது!’ - ஹவுஸ்மேட்ஸிடையே பேசிய சரத்குமார்

அதன் பின்னர் இந்த பணப்பெட்டி குறித்து ஹவுஸ்மேட்ஸிடையே பேசிய சரத்குமார், “ஒரு போட்டின்னு வந்தா.. வெற்றி.. தோல்வி நிச்சயமா இருக்கும். 3 லட்ச ரூபாய் தான் இதுல இருக்கும்னு நெனைக்கலாம்.. இதுக்கு மேலயும் இருக்கலாம் எனக்கே தெரியாது.... இத எடுத்துக்கிட்டு நாம வீட்டுக்கு போயிடலாம்னு நெனைக்கலாம். அது உங்கள பொறுத்துதான் இருக்கு. எல்லாரும் வெற்றி பெற முடியாது. உங்கள்ல யாரோ ஒருத்தர் தான் வெற்றி பெற்று போகப் போறீங்க.  முடிவெடுப்பது ரொம்ப முக்கியம்.” என்று கூறினார்.

இந்தப் பெட்டிதான் இப்போது ஹவுஸ்மேட்ஸை பேச வைத்திருக்கிறது. ஆம், ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவரும் இந்த பெட்டி குறித்தும், அதில் இருக்கும் பணத்தை குறித்தும் தங்களுடைய கருத்துக்களை பகிர தொடங்கியிருக்கின்றனர். இதனிடையே இந்த 3 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வெளியே போக போகும் போட்டியாளர்கள் யார்? அப்படி யாரேனும் முடிவெடுப்பார்களா? என்றெல்லாம் ரசிகர்களின் மத்தியில் பேச்சுகள் எழுந்துள்ளன.

அதேசமயம் பிக்பாஸ் வீட்டில், இறுதிப்போட்டியில் ஏதேனும் ஒரு போட்டியாளர் தான் கண்டிப்பாக வெற்றி பெறப் போகிறார். வெற்றி பெற போகிறவர்கள் யார் என்கிற யூகம் சக போட்டியாளர்களிடம் இருந்தாலும், அல்லது இல்லையென்றாலும் கூட, தங்களைப் பற்றிய ஒரு கருத்து கணிப்பு ஒவ்வொரு போட்டியாளரிடமும் இருக்கும். அதைவைத்து யோசித்து, இந்த பெட்டியில் இருக்கும் இந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு சென்று விடலாமா? என்று ஹவுஸ்மேட்ஸ் யோசிக்க வாய்ப்புள்ளதா? என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

நான் இந்த பெட்டியை எடுத்து விடுவேன், இதில் தவறு எதுவும் இல்லை!

இந்த நிலையில்தான் பிக்பாஸ் வீட்டுக்குள் நிரூப் இதுகுறித்து பேசும் போது, “நான் இந்த பெட்டியை எடுத்து விடுவேன்! யாரேனும் ஒருவர்தான் இறுதியில் வெற்றிபெற முடியும். இதில் தப்பேதும் இல்லை!” என்று கூற, சிபியும் அவருடன் சேர்ந்து, “ஆமாம் கண்டிப்பாக இதில் தவறு எதுவும் இல்லை!” என்று சொல்கிறார்.

அதன் பின்னர் நிரூப், சிபி இருவரும் இணைந்து கிச்சனிலில் நின்று தாமரையிடம் இது குறித்து பேசுகின்றனர். தாமரையும் இவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். பிரியங்கா தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது தாமரையிடம் பேசும் நிரூப் இதே கருத்தை சொல்கிறார்.

இன்றைய ஃபெனிஃபிட்டா? அல்லது நாளைய சாதனையா?

முன்னதாக சரத்குமார் கூறும்பொழுது, “இன்றைய ஃபெனிஃபிட்டா? அல்லது நாளைய சாதனையா? என முடிவெடுத்துக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி இன்றைய இந்த சலுகையை பயன்படுத்திக் கொண்டு வெளியேறப் போவது யார்? அல்லது நாளைய சாதனைக்காக காத்திருக்க போகிறவர்கள் யார்? என்பதை எபிசோடுகளில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய இணைப்புகள்

Sarathkumar rs 3 lakh money Box biggboss5 housemates viral talks

People looking for online information on BiggBoss5, BiggBossTamil5, Housemates, Sarathkumar biggboss entry, VijayTelevision will find this news story useful.