‘சந்தானம்’ நடிப்பில் நீண்ட நாள் காத்திருந்த ‘அதகள’ காமெடி படம் ‘பிரபல’ ஓடிடியில் ரிலீஸா??

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சந்தானம் ஆரம்பத்தில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே எல்லாம் இப்படித்தான், கண்ணா லட்டு திண்ண ஆசையா உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார்.

தமது நண்பரும் மறைந்த டாக்டருமான சேதுராமனுடன் இணைந்து வாலிபராஜா படத்திலும் நடித்தார். அதன் பின்னர் சந்தானம் நடித்த படங்களில் தில்லுக்கு துட்டு 2 பாகங்கள், பிஸ்கோத், டகால்டி, ஏ1, பாரிஸ் ஜெயராஜ் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேறபைப் பெற்றன.

இதனிடையே சந்தானம் நடிப்பில் உருவானது 'டிக்கிலோனா' எனும் காமெடி டைம் டிராவல் கான்செப்ட் திரைப்படம். புதுமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தானம் மூன்று விதமான தோற்றத்தில் தோன்றுவதாக ட்ரெய்லரில் தெரியவருகிறது. ஆனால் அவை உண்மையில் 3 கெட்டப்பா அல்லது ஒரே ஆள் 3 காலங்களில் பிரவேசிக்கிறாரா என்பது இன்னும் புலப்படவில்லை.

இதனிடையே படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்த நிலையில், டிக்கிலோனா படம் நேரடியாக ஓ.டி.டியில் வெளியிட தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டு வந்தது. அதன்படி, டிக்கிலோனா திரைப்படம் ஜீ-5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன.

எனினும் டிக்கிலோனா படத்தின் ஓ.டி.டி வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: அடக்கடவுளே! ஷூட்டிங்கில் விபரீதம்.. சம்பவ இடத்திலேயே இளைஞர் மரணம்!!.. சோகத்தில் படக்குழுவினர்!

தொடர்புடைய இணைப்புகள்

Santhanams Dikkilona premiere in Zee5 announcement soon

People looking for online information on Dikkiloona, Santhanam will find this news story useful.