''சில மெடிக்கல் ட்ரீட்மென்ட் இருப்பதால்.... கவலைப்பட வேண்டாம்'' - பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக அளவில் கொரோனா பெரும் அச்சுறுத்துதல்களை ஏற்படுத்தி வருகிறது. பள்ளி கல்லூரிகள் டிசம்பர் வரை திறக்கப்பட வாய்ப்பில்லை என்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கப்படாததால் அது சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சாமான்யர்கள் , அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள் என பாகுபாடில்லாமல் கொரோனா வைரஸ் அனைத்து தரப்பினரையும் பாதித்து வருகிறது. கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான வி.சாமிநாதன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தது திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகர் சஞ்சய் தத்திற்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது. இதனையடுத்து அவர் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''சில மருத்துவ சிகிச்சைகள் செய்ய வேண்டி இருப்பதால் பணிகளில் இருந்து சில நாள் ஓய்வு பெறுகிறேன். யாரும் கவலைப்பட வேண்டாம். உங்கள் அன்பினாலும், வாழ்த்துகளினாலும் நான் மீண்டு வருவேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Sanjay Dutt's latest statement's about his health condition goes viral | தனது உடல் நிலை குறித்து சஞ்சய் தத்தின் பதிவு வைரல்

People looking for online information on Sanjay Dutt will find this news story useful.