என்னது பொறாமையா?... ஷிவானிக்கு 'செம' கவுண்டர் கொடுத்த சனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் அரக்கர்கள் மற்றும் அரச குடும்பத்தினர் மத்தியிலான டாஸ்க் வெகுவாக களைகட்டியது. முதல்நாள் சுரேஷ் சக்கவர்த்தி தலைமையிலான அரக்கர்கள் பேசியே மற்றவர்களை வெறுப்பேற்ற முயன்றனர். ஆனால் நேற்று டாஸ்க்கில் ரியோ, ரம்யா பாண்டியன் இருவரும் பல்வேறு புதிய உத்திகளை வகுத்தனர்.

ஆரஞ்சு ஜூஸ் கண்ணுக்குள் அடிப்பது, ஸ்ப்ரே அடிப்பது, பாத்திரங்களை வைத்து சத்தம் போடுவது என பல்வேறு வழிகளில் எதிரணியை அரக்கர்கள் டீம் வெறுப்பேற்றியது. இதனால் பிக்பாஸ் வீடே பற்றியெரிய இதற்கும் தனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பது போல ரம்யா அமைதியாக தன்னுடைய வேலையை பார்த்து கொண்டிருந்தார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் ஆஹா ஒருவழியா ஷிவானி பேசிட்டாங்க என, ஷிவானியை பற்றி மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் அரக்கர்கள் குடும்பம் அரச குடும்பத்தினரை பயங்கரமாக வெறுப்பேற்ற முயன்றபோது ஷிவானி தனியாக ராம்ப்வாக் சென்றது குறிப்பிடத்தக்கது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

Sanam Shetty, Shivani funny conversation goes viral

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.