பிக்பாஸ் பற்றி சனம் வெளியிட்ட மரண மாஸ் பதிவு..."கடைசியில தகுதியான போட்டியாளர்"...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்  கடுமையான போட்டியாக கருதப்பட்ட நடிகை சனம் போட்டியில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. காரணம் மனதில் பட்டதை நேர்மையாகவும் தைரியமாகவும் கூறும் பழக்கம் உடையவர் சனம் செட்டி. இதனால் அந்த வீட்டில் சிலரது எதிர்ப்பை சம்பாதித்தாலும், மக்கள் அவரை பல சமயங்களில் பாராட்டி உள்ளனர்.  அவரது எவிக்ஷனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் #NoSanamNoBiggboss என்ற ஹேஷ்டேக் கூட வைரலானது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சனம் வைர்ல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைவார் என்று வெகுவாக எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் அவரும் ஒரு வார காலமாக மக்கள் முன்னிலையில் வரவில்லை எனபது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் அவர் முதல்முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது சனம் மாஸாக ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் "அந்த கப் இல்லன்னா என்ன, இந்த கப் இருக்கே. பிக்பாஸ் வீட்டில் இருந்து என்னுடைய பேவரைட்  காபி கப். மறக்க முடியாத பல ஞாபகங்கள். பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் என் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். தகுதியான போட்டியாளர்  வெற்றி பெறட்டும்" என்று கூறியுள்ளார்.

Sanam mass post after biggboss4tamil சனம் வெளியிட்ட மரண மாஸ் பதிவு

People looking for online information on Biggboss4tamil, Sanam will find this news story useful.