இவ்ளோ 'அமைதியா' இருக்க கூடாதே... என்ன ஆச்சு 'அந்த' ரெண்டு பேருக்கும்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த சில நாட்களாக பிக்பாஸ் வீட்டில் இயல்புக்கு மீறிய அமைதி நிலவி வருகிறது. வழக்கமாக டாம் அண்ட் ஜெர்ரியாக மாறி மொத்த வீட்டையும் கலவர பூமியாக மாற்றி விடும் பாலாஜி-சனம் படு அமைதியாக இருந்து வருகின்றனர். அதைவிட இருவரும் தற்போது இருவரும் நண்பர்கள் போல உலா வருவது குறிப்பிடத்தக்கது. மணிக்கூண்டு டாஸ்க்கின் போது பாலாஜி எறிந்த துணி சனம் மீது பட்டது.

ஆனால் அப்போது கூட அன்னை தெரசா போல புன்னகையுடன் சனம் அதை கடந்து விட்டார். தொடர்ந்து கருப்பு-வெள்ளை டாஸ்க்கின் போது இருவரும் இணைந்து நடித்தது பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஷாக்கானது குறிப்பிடத்தக்கது. ஆனால் ப்ரோமோவில் மட்டுமே அது ஒளிபரப்பானது. நிகழ்ச்சியில் அதை பிக்பாஸ் கட் செய்து ரசிகர்களை அவர் பங்குக்கு டென்ஷன் ஆக்கினார்.

சனம்-பாலாஜி இருவரின் இந்த அமைதியை பார்த்த ரசிகர்கள் என்ன ரெண்டு பேரும் இப்படி மாறிட்டாங்க? என. மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர். இந்த வாரம் பிக்பாஸ் வீடு அமைதியாக இருந்ததால் பெரும்பாலும் சண்டைகள் எதுவும் இல்லை. ஆனால் வருகின்ற வாரம் இதற்கு பிக்பாஸ் ஆப்பு வைப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. 

தொடர்புடைய இணைப்புகள்

Sanam and Balaji changed their attitude?, Fans Confused

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.