"வளர்ப்பு அப்படி"... ஆரியை மறைமுகமாக வம்பிழுத்த சம்யுக்தா... கொந்தளிக்கும் ரசிகர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் பிக்பாஸில் வாக்குவாதங்கள் முற்றி மோசமான சம்பவங்கள் நடைபெற்றது. ஆரியை அனைத்து போட்டியாளர்களும் டார்கெட் செய்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் 'யாரை நான் முன்னிறுத்தி விளையாடுகிறேன்' என்று பாலாவிடம் அர்ச்சனா நேரடியாக கேள்வி கேட்கிறார். அதற்கு பாலா மறைக்காமல் உண்மையை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் அதன் பிறகு பாலா மற்றும் கேபி, அர்ச்சனா இடையே கடுமையான மோதல் ஏற்படுகிறது. பாலா கூறும்போது "என் பேரை காலி பண்ண தான் எல்லாரும் இப்படி பேசுறீங்க" என்று கூறுகிறார். அதற்கு "அர்ச்சனா இனிமேல் என்னை அக்கா என்று அழைக்காதே. நான் உனக்கு அக்கா இல்லை" என்று கோபத்தில் பேசுகிறார்.

அதன் பிறகு ஆரியை பற்றி மறைமுகமாக சம்யுக்தா மோசமாக பேசுகிறார். முன்பே ஒரு முறையும் 'வளர்ப்பு சரி இல்லை' என்று ஆரியை பற்றி அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இன்றும் அவர் அப்படி கூறுவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பலரும் ஆரிக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

"வளர்ப்பு அப்படி"... ஆரியை மறைமுகமாக வம்பிழுத்த சம்யுக்தா... கொந்தளிக்கும் ரசிகர்கள்...! வீடியோ

Tags : Biggboss

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Samyuktha talks indirectly ill about aari அரியை மீண்டும் வம்பிழுத்த சம்யுக்தா

People looking for online information on Biggboss will find this news story useful.