அவதூறு மூலம் வெறுப்பை விதைத்த நபருக்கு.. அன்பால் பதிலடி கொடுத்த சமந்தா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: தன்னை பற்றி பொய்யான கேள்வியை கேட்ட ரசிகருக்கு சமந்தா தனது பாணியில் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Advertising
>
Advertising

 

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் அஞ்சான், தெறி, மெர்சல், தங்கமகன் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர்.

இவரைப்பற்றி எந்த ஒரு கிசுகிசு வந்தாலும், அதைப்பற்றி சிறிதும் கண்டு கொள்ளாமல், முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து வெற்றி பெற்று, இப்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

ஓ சொல்றியா மாமா

சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் "ஓ சொல்றியா மாமா"  பாடலுக்கு நடனம் ஆடினார். இதன் மூலம் பல ரசிகர்களை உற்சாகத்தோடு எழுந்து ஆட வைத்தார். அந்தப்பாடல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும், ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று வரையிலும் இந்த பாடல் யூடியூப்  ட்ரெண்டிங்கில் இடம் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து

2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்தார் சமந்தா. திருமணத்திற்கு பிறகும்  சில  படங்களில் நடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இருவரும் விவாகரத்து செய்ய போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இதனை பார்த்த ரசிகர்கள் பேரதிர்ச்சியில் மூழ்கினர்.

காரணம் என்ன

மேலும் இருவரும் எந்த ஒரு காரணமும் வெளியே கூறாமல் சுமூகமாக பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விவாகரத்துக்கு பின்னர் சில படங்களில் கமிட் ஆனாலும், பல நெட்டிசன்கள் அவரிடம் சர்ச்சைக்குரிய கேள்விகளையும் கேட்டு வருகின்றனர். இன்று வரையிலும் அந்த கேள்விகளை அவர் சிறிதும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அன்பால் பதிலடி

இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் நடிகை சமந்தா, நாகர்ஜுனா வீட்டிலிருந்து விவாகரத்துக்குப் பின்னர் 50 கோடி எடுத்துகொண்டு சென்றதாக பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த விஷயம் உண்மை இல்லை. அது ஒரு வதந்தி என்றாலும், ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தில் மற்றவர்கள் நுழைந்து தவறாகப் பேசுவதற்கு உரிமை இல்லை. இந்நிலையில், அந்த நெட்டிசன் கூறிய கருத்துக்கு சமந்தா ஒரு பதிலை கூறியுள்ளார். அதில் அவருடைய பெயரைக் கூறி," God Bless your Soul" 'கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக' என அன்பால் பதிலடி கொடுத்தார். தன்னை வெறுப்பவர்கள் இடமும் அன்பால் பதிலடி கொடுக்கும் சமந்தாவின் குணத்தை பார்த்து   பாராட்டுகளும், வாழ்த்துக்களும் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

அவதூறு மூலம் வெறுப்பை விதைத்த நபருக்கு.. அன்பால் பதிலடி கொடுத்த சமந்தா! வீடியோ

Samantha replied those who spread rumours about her.

People looking for online information on OhSolriyaMama, Pushpa, Samantha, SamanthaRuthPrabhu will find this news story useful.