"அழாதீங்க, WE லவ் யூ".. நிகழ்ச்சி மேடையில் கண்ணீர் விட்டு கலங்கிய சமந்தா.. ரசிகர்கள் செஞ்ச விஷயம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான திரைப்படங்கள் நடித்துள்ள சமந்தாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

Advertising
>
Advertising

கடந்த ஆண்டு, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோருடன் சமந்தா இணைந்து நடித்திருந்த "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம் வெளியாகி இருந்தது. இதற்கு அடுத்தபடியாக, சமீபத்தில் சமந்தா நடிப்பில் யசோதா என்ற தெலுங்கு திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஷகுந்தலம், குஷி உள்ளிட்ட திரைப்படங்களிலும் சமந்தா நடித்து வருகிறார். இதனிடையே, ஷகுந்தலம் படத்தின் ட்ரைலர் கூட சமீபத்தில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறது.

பான் இந்திய படமாக உருவாகும் இந்த படம் தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது. ஷகுந்தலம் திரைப்படத்தை இயக்குனர் குணசேகர் எழுதி இயக்குகிறார்.


இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்க, சேகர்  V ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார், சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகிறார். Gunaa DRP - Teamworks சார்பில் நீலிமா குணா,  இப்படத்தை தயாரிக்கிறார்.  வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, சகுந்தலம் படத்தை வழங்குகிறார்.

ஷகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகை சமந்தாவும் கலந்து கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சமந்தா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துள்ளதால் ரசிகர்களும் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று இருந்தனர். அப்போது படத்தின் இயக்குனர் குணசேகரன் பேசி கொண்டிருக்க, சமந்தா திடீரென மேடையிலேயே உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழவும் செய்திருந்தார். மேலும், சமந்தா தான் படத்தின் ஹீரோ என்றும் இயக்குனர் குணசேகரன் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் உருக்கத்துடன் பேசி இருந்த சமந்தா, வாழ்க்கையில் பல போராட்டங்களை நான் சந்தித்து இருக்கிறேன் என்றும் சினிமாவை நான் நேசிப்பதும், சினிமா என்னை நேசிப்பதும் தான் எந்த மாற்றமும் இன்றி நிலையாக இருக்கிறது என்றும், ஷகுந்தலம் படத்தின் மூலம் சினிமாவுக்கும் எனக்குமான காதல் இன்னும் வளரும் என நினைக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மையோசிடிஸ் என்னும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, உடல் நலனை கருத்தில் கொண்டு பெரிய அளவில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. அப்படி ஒரு சூழலில் தற்போது ஷகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கண்ணீர் விட்ட சமந்தாவை அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பி அவருக்கு ஆறுதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Samantha cried and emotional in Shaakuntalam movie event

People looking for online information on Samantha ruth prabhu, Shaakunthalam will find this news story useful.