மல்லிகைப்பூ, பட்டுப்புடவையில் சாய் பல்லவி.. தஞ்சை பெரிய கோவிலில் சாமி தரிசனம்! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சாய்பல்லவி தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | BIGG BOSS சீசன் - 6.. கமல்ஹாசன் தோன்றும் புதிய டீசர் வீடியோ! கமல் பேசுற "பஞ்ச்" தான் ஹைலைட்!

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் மலையாள படத்தின் மலர் டீச்சர் கதாபாத்திரம் மூலம் கவனம் ஈர்த்தவர் சாய்பல்லவி. அதற்கு முன்பாக ’உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நடன நிகழ்ச்சியிலும் மற்றும் தாம்தூம் படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்திருந்தார்.

ஃபிடா படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமான சாய் பல்லவி, தென்னிந்தியாவில் திறமையான நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

நாக சைதன்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்த லவ் ஸ்டோரி, நானி ஜோடியாக ஷ்யாம் சிங்கா ராய் ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.

சமீபத்தில் வெளியான விராத பர்வம் மற்றும் கார்கி திரைப்படம் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. சாய் பல்லவியின் நடிப்பு இந்த திரைப்படங்களில் முக்கிய அம்சமாக அமைந்தது.

சாய்பல்லவி அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் புதிய படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தன்னுடைய குடும்பத்துடன் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாய் பல்லவி பகிர்ந்துள்ளார்.

சிவப்பு நிற பட்டுப் புடவை அணிந்து மல்லிகைப்பூ சூடி சாய் பல்லவி பெரிய கோவில் விமானத்தை அண்ணாந்து பார்ப்பது போல புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்‌.

 

Also Read | ONAM: பிரபல OTT-யில் ரிலீஸாகும் BLOCKBUSTER 'சீதா ராமம்'.. எப்போ? எதுல?

 

தொடர்புடைய இணைப்புகள்

Sai Pallavi Visited Tanjore Periya Kovil with her family

People looking for online information on Sai Pallavi, Sai Pallavi Visits Tanjore Periya Kovil, Tanjore Periya Kovil will find this news story useful.