கோயில் திருவிழாவில் மக்களோடு மக்களாக கூட்டத்தில் பூஜா கண்ணன் & சாய் பல்லவி.. TRENDING

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சாய்பல்லவி மற்றும் அவரது தங்கை பூஜா கண்ணன் மக்களோடு மக்களாக கூட்டத்துடன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் மலையாள படத்தின் மலர் டீச்சர் கதாபாத்திரம் மூலம் கவனம் ஈர்த்தவர் சாய்பல்லவி. அதற்கு முன்பாக ’உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நடன நிகழ்ச்சியிலும் மற்றும் தாம்தூம் படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்திருந்தார்.

ஃபிடா படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமான சாய் பல்லவி, தென்னிந்தியாவில் திறமையான நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

நாக சைதன்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்த லவ் ஸ்டோரி, நானி ஜோடியாக ஷ்யாம் சிங்கா ராய் ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.

சமீபத்தில் வெளியான விராத பர்வம் மற்றும் கார்கி திரைப்படம் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. சாய் பல்லவியின் நடிப்பு இந்த திரைப்படங்களில் முக்கிய அம்சமாக அமைந்தது.

சாய்பல்லவி அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் புதிய படத்தில் நடிக்கிறார். அவரது தங்கை பூஜா கண்ணன், சித்திரை செவ்வானம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி & பூஜா கண்ணன், எத்தை அம்மன் கோயில் திருவிழாவில் பாரம்பரிய உடை அணிந்து குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியை சுற்றியுள்ள 14 படுகர் கிராம மக்களின் குலதெய்வம் எத்தை அம்மன் ஆகும்.  இந்த திருவிழாவில் நடிகை சாய் பல்லவி, முக கவசம் அணிந்து கொண்டு தங்கை பூஜா கண்ணன் உடன் கலந்து கொண்டார். ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அமர்ந்து விழாவை கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்கள் டிவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகின்றன. #Saipallavi ஹேஸ்டேக் இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பூஜா கண்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Sai Pallavi Pooja Kannan Hethai Habba festival photos with crowd

People looking for online information on Pooja Kannan, Sai Pallavi will find this news story useful.