விஜய் டிவி புகழ் பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு... சோகத்தில் கடை உரிமையாளர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சி வாராவாரம் சுவாரசியம் குறையாமல் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. கோமாளிகள் மட்டுமல்லாது போட்டியாளர்களும் சேர்ந்துகொண்டு செய்யும் ரகளைகள் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. அதிலும் பலரைப் பற்றி மக்கள் வைத்திருக்கும் பிம்பமே இந்த சீசன் 2 மூலமாக மாறியுள்ளது. சீரியஸான மனிதர்களாக இருப்பார்கள் என்று நினைத்த பலரும் மிகவும் எளிமையான, சுவாரசியமான, ரசிக்கக்கூடிய மனிதர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல் கோமாளிகள் உடன் போட்டியாளர்கள் பழகும் விதமும் ரசிக்கும்படி உள்ளது.

இந்நிலையில் கடந்த சீசன் கோமாளிகளான புகழ், பாலா, மணிமேகலை, ஷிவாங்கி போன்றோர் இந்த சீசனிலும்  பங்கெடுத்துள்ளனர். குக் வித் கோமாளி சீசன் 2 கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. எனினும் இந்த சீசன் பலருக்கும் எப்போது பேவரைட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
குக் வித் கோமாளி புகழ் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை அனுபவித்து எல்லா வகையான வேலைகளையும் செய்து இன்று நல்ல நிலைமைக்கு வந்துள்ளார். சமீபத்தில் விலை உயர்ந்த கார் ஒன்றையும் வாங்கியுள்ளார். எனினும் பழைய நிலைமையை மறக்காது இன்றும் தாழ்மையுடன் ரசிகர்களோடு அவர் உறவாடும் விதம் பலரையும் ஈர்த்துள்ளது. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் புகழை நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு செல்போன் கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர். அப்பொழுது அங்கு அவரைப் பார்க்க ஏராளமான ஜனங்கள் கூடிவிட்டனர். இதனை விதிமுறைகளுக்கு மீறி கூட்டம் கூடியதாக கடை உரிமையாளர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் சிறிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Pugazh

தொடர்புடைய இணைப்புகள்

Sad happening in pugazh arrival incident புகழ் பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு

People looking for online information on Pugazh will find this news story useful.