ரூட்டை மாற்றிய அன்னபூரணி!.. ‘எங்கயோ இடிக்குதே?’.. அர்ஜூனின் டவுட்! ரோஜாவில் புது ட்விஸ்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் முக்கியமான மற்றும் முதன்மையான சீரியல் ரோஜா. பல்வேறு ரசிகர்களால் தொடர்ந்து பார்க்கப்படும் ரோஜா சீரியலில் அர்ஜுன், ரோஜா என்கிற கதாபாத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களாக இருக்கின்றனர். இதில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிபு சூரியன் நடிக்கிறார்.

தற்போது வரை இந்த சீரியலில் அனு கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வந்த நடிகை ஷாமிலி சுகுமார் கர்ப்பம் தரித்திருக்கும் காரணமாக இந்த சீரியலில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்கிறார். அதற்கு பதிலாக வேறு ஒரு நடிகை களமிறக்கப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சீரியல் கதையை பொறுத்தவரை பிரபல கொலை வழக்கில் சாக்‌ஷிக்கு உதவியாக அனு இருந்ததை கோர்ட்டில் வாதாடி அம்பலப் படுத்தியிருக்கிறார் அர்ஜுன்.

இதனால் அனு சிறைக்குச் சென்றிருக்கிறார். ஆனால் சிறையில் சாக்‌ஷி அனுவை படாத பாடு படுத்துகிறார். தன்னையும் மாட்டிவிட்டு தானும் மாட்டிக்கொண்ட அனுவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று தினம் தினம் சாக்‌ஷி அனுவை சிறைத்துறை போலீசாரின் உதவியுடன் டார்ச்சர் செய்து வருகிறார். இதனிடையே அர்ஜுன் மற்றும் ரோஜாவுக்கு எல்லா பிரச்சனைகளும் முடிந்ததால் சாந்தி முகூர்த்தம் நடத்துவதற்கு அர்ஜூனின் அப்பா அம்மா முடிவு செய்ய, முதலில் அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்து வந்த அன்னபூரணி (வடிவுக்கரசி) தற்போது திடீரென அந்தர் பல்டி அடித்திருக்கிறார்.

ஆம், “அனுவை காப்பாற்ற வேண்டுமானால் நாம் ரூட்டை மாற்ற வேண்டும்” என மனதில் முடிவு செய்துகொள்ளும் அன்னபூரணி திடீரென ரோஜாவை அழைத்துக் கட்டிப்பிடித்து, “நீதான் உண்மையான செண்பகத்தின் மகள் .. என்னை தனியாக யோசிக்க விடாமல் என் சிந்தனையை இவ்வளவு நாள் ஆக்கிரமித்து என்னை நம்ப வைத்து இருந்தவள் அனு தான். இப்போது யோசித்துப் பார்த்தால்தான் எல்லாம் புரிகிறது.. நீதான் இந்த வீட்டு பொண்ணு.. அனு இந்த வீட்டு பொண்ணு இல்லை என்பதை நான் புரிந்து கொண்டேன்” என்றெல்லாம் பேசுகிறார்.

இந்த திடீர் ட்விஸ்ட்டை எதிர்பார்க்காத அர்ஜுன் எங்கேயோ இடிக்குதே என்று அன்னபூரணி பாட்டியைப் பார்த்து யோசித்துக் கொண்டே இருக்கிறார். மேலும் தொடரும் அன்னபூரணி, “ஒரு நாள் பார்த்து நானே சொல்கிறேன்.. அப்போது இரண்டு பேருக்கும் சாந்திமுகூர்த்தம் வைத்து விடலாம்.. இவ்வளவு நாள் உன்னையும் அர்ஜுனையும் பேசி கஷ்டப்படுத்தி இருந்ததற்கு மன்னித்துவிடுங்கள்!” என்று கூறுகிறார். இதையெல்லாம் மற்றவர்கள் நம்பி உணர்ச்சிவசப்பட்டு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ரோஜாவோ பாட்டி தம்மிடம் இப்படி பேசுவதால் மனம் உருகி அழுதும் சந்தோஷத்தில் சிரித்தும் பாட்டியைக் கட்டிப் பிடிக்கிறான்.

ஆனால் அர்ஜுனோ, இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது என்று அன்னபூரணி பாட்டியை உற்று நோக்குகிறார். திடீரென அன்னபூரணியின் இந்த மனமாற்றத்தை நம்பவே முடியல என்று அர்ஜுன் கூற, அப்போதும். “நீ சந்தேகப்பட்டது தவறில்லை... ஏனென்றால் இவ்வளவு நாள் அனு சொன்னபடி கேட்டு நான் அவ்வளவு செய்துவிட்டேன்!” என்று அன்னபூரணி அதற்கும் டயலாக் பேசி டஃப் பர்ஃபார்மன்ஸ் கொடுக்கிறார்.

அத்துடன், “என்னை மன்னிச்சிடு மா.. இவ்வளவு நாள் உன்னை கஷ்டப்படுத்தி பேசியதற்கு!” என்று சொல்லி ரோஜாவின் காலில் கூட விழுகிறார் அன்னபூரணி. அப்போது அர்ஜுனின் அம்மா கல்பனா, அத்தை என்னது இதெல்லாம் என்று சொல்லி அவருடன் சேர்ந்து அழுகிறார். மொத்தத்தில் பாட்டியின் இந்த பிரம்மாண்டமான பர்ஃபார்மன்ஸை பார்த்து அனைவரும் உருகி போய்விட்டதாகவும் போகப்போக பாட்டியைப் பற்றி உங்களுக்கு தெரியவரும் என்றும் அர்ஜுன் தன் மனதுக்குள் நினைத்துக் கொள்வதுடன் இந்த எபிசோடு நிறைவடைகிறது.

இன்னும் விறுவிறுப்பான பல  எபிசோடுகள் இந்த சீரியலில் காத்திருப்பதாகவும் அத்துடன் ஏற்கனவே இந்த சீரியலில் நடித்த பிரபலமான கேரக்டர் மீண்டும் இந்த சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Roja Serial Grandma Twist Arjun doubt interesting episode Sun Tv

People looking for online information on Entertainment, Rojaserial, Saregama, SunTV, Tending, TVSerial, TVShows will find this news story useful.