மனமுடைந்த ராபர்ட் .. "நீங்க அழறத பாக்க முடியாது மாஸ்டர்" - தேற்றும் ரச்சிதா!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6 வது சீசன் ஒவ்வொரு நாளும் பல்வேறு திருப்புமுனைகளுடன் தான் சென்று கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதத்திற்கு மேலான நிலையில், ஏகப்பட்ட சண்டைகள் மற்றும் அதே வேளையில் கலகலப்பான விஷயங்கள் கூட அவ்வப்போதும் அரங்கேறி வருகிறது.

இதற்கு மத்தியில், டாஸ்க் என வந்து விட்டால் நிச்சயம் போட்டியாளர்கள் மத்தியில் மாறி மாறி களேபரங்கள் தான் நடைபெறும்.

பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க் உள்ளிட்ட இரண்டு டாஸ்க்குகள் காரணமாக கடந்த சில எபிசோடுகளில் பல போட்டியாளர்கள் மத்தியில் சண்டை வெடித்திருந்தது. இதன் காரணமாக உருவான பல பிரச்சனைகளுக்கு வார இறுதியில் வந்த கமல்ஹாசன் விடை அளித்திருந்தார். இதற்கு மத்தியில், ஜிபி முத்து தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என அங்கிருந்து இரண்டாவது வாரம் கிளம்பி விட்டார்.

இதற்கடுத்து, சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரியும் உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தனர். தொடர்ந்து, தற்போது ஒவ்வொரு போட்டியாளர்களும் மீண்டும் தங்களின் ஸ்டைலில் பிக்பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

இதற்கிடையில், புதிய டாஸ்க்கின் காரணமாக இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறி இருந்தது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரத்தை எற்றுள்ளனர். அவ்வகையில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டர், ராணியாக ரச்சிதா, படைத்தளபதியாக அசீம், அரசவை ஆலோசகராக (ராஜகுருவாக) விக்ரமன், இளவரசராக மணிகண்டா ராஜேஷ், இளவரசியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த டாஸ்க் பெயரிலும் பல்வேறு விஷயங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. மறுபக்கம் அசீம் மற்றும் விக்ரமன் இடையே நடந்த சண்டை, அசீம் மற்றும் ADK ஆகியோரிடையே நடந்த சண்டை என அடுத்தடுத்து பல களேபரங்கள் கூட பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி இருந்தது.

இந்த நிலையில், ராபர்ட் மாஸ்டர் கண்ணீர் விட்டு தனியாக இருக்க, மறுபக்கம் இந்த விவகாரம் தொடர்பாக ரச்சிதாவும் கவலை கொண்ட விஷயம், தற்போது பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானதில் இருந்தே ரச்சிதா மீது தனி பாசம் மற்றும் அதிக அக்கறை எடுத்து வருகிறார் ராபர்ட் மாஸ்டர். இது தொடர்பாக நிறைய வீடியோக்கள் கூட இணையத்தில் அதிகம் வைரலாகியும் வந்தது. நேரடியாகவே ராபர்ட் மாஸ்டரிடம் பேசி இருந்த ரச்சிதா தன்னிடம் நார்மலாக பழகுங்கள் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

அப்படி ஒரு சூழலில், சமீபத்தில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரச்சிதாவும் பிக்பாஸ் வீட்டிற்குள் வலம் வந்தனர். அப்போது, ரகசியமாக ரச்சிதா மற்றும் அசீம் ஆகியோருக்கு கஜானாவில் பொருட்களை நிரப்பும் படி பிக்பாஸ் டாஸ்க் ஒன்றை கூறி இருந்தார். இந்த விஷயம், ராஜாவாக இருந்த ராபர்ட் மாஸ்டருக்கு கூட தெரியாமல் இருந்தது.

இதனைத் தொடர்ந்து, ராஜா ராணி டாஸ்க் தற்போது முடிவுக்கு வந்ததாக தெரியும் நிலையில், ரகசியமாக ரச்சிதா மற்றும் அசீம் ஆகியோர் கதிரவன் உதவியுடன் செய்த டாஸ்க் பற்றி அனைத்து போட்டியாளர்களும் இருக்கும் போது வெளிப்படையாக பேசுகிறார் பிக்பாஸ். தனக்கு தெரியாமல் ரகசியமாக ராணியாக இருந்த ரச்சிதா தன்னிடம் அதை மறைத்து விட்டார் என ராபர்ட் மாஸ்டர் கண்ணீர் விடவும் ஆரம்பிக்கிறார்.

மற்ற போட்டியாளர்கள் அவரை தேற்ற முயற்சிக்கும் நிலையில், ரச்சிதாவும் ராபர்ட் மாஸ்டர் அருகே சென்று, "அழுகுற அளவுக்கு எல்லாம் ஒண்ணுமில்ல. ப்ளீஸ் மாஸ்டர், நீங்க அழுகுறத சத்தியமா என்னால பார்க்க முடியாது. இது வந்து ராஜ்யத்தை காப்பாத்தணும்ன்னு தான் சொன்னாங்க. இது சீக்ரெட் டாஸ்க். இப்டி நடக்கும்ன்னு சொல்லல மாஸ்டர். ப்ளீஸ் மாஸ்டர்" என ஆறுதல் கூறுகிறார். ஆனாலும் , ராபர்ட் மாஸ்டர் அழுது கொண்டே இருப்பதாக தெரிகிறது.

இதன் காரணமாக, ரச்சிதாவும் கண் கலங்கி போகிறார். டாஸ்க்கில் நடந்ததை சீரியஸாக எடுத்து அதற்காக ராபர்ட் மாஸ்டர் அழுத விஷயம், பிக்பாஸ் பார்வையாளர்கள் கவனத்தை அதிகம் பெற்று வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Robert master emotional after rachitha as queen in task

People looking for online information on Bigg Boss Tamil, Rachitha, Robert master will find this news story useful.