“செருப்பால அடிப்பேன்..” .. வெடிக்கும் தனலட்சுமி - ராபர்ட் சண்டை.. பரபரப்பில் ஹவுஸ்மேட்ஸ்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | நடிகர் அஜித்தை ஆசிர்வதித்த வயதான பெண்மணி.. பரவும் நெகிழ்ச்சியான வீடியோ!

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார்.  இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் தனலட்சுமி தூங்கிக் கொண்டிருந்ததை பார்த்து ராபர்ட், சாப்பிடுவது தூங்குவது மட்டுமே வேலையாக இருக்கிறது என்று கூறிவிட்டார். மேலும் தனலட்சுமியிடம் தூக்கத்திலிருந்து எழச்சொல்லி வலியுறுத்தினார். அப்போது தனலட்சுமி, “நான் என்ன சாப்பிடுகிறேனா.. தூங்குகிறேனா என்பதை பார்ப்பதே வேலையாக விட்டது” என்று கூறுகிறார். இதை கேட்ட ராபர்ட், “செருப்பால அடிப்பேன்.. நான் தான் அப்படி சொன்னேன் .. நீ யாரை சொல்கிறாய்..?” என்றார். அதற்கு தனலட்சுமியோ, “அப்படியானால் உங்களை தான் சொன்னேன்!” என்கிறார்.

முன்னதாக தனலட்சுமி எனக்கு தலை வலிக்கிறது. அதனால் நான் தூங்குகிறேன் என்று சொல்லி விட்டு படுத்துக் கொண்டே இருந்தார். அப்போது பேசிய ராபர்ட் இப்படி தூங்கிக்கொண்டிருந்தால் நாய் குரைக்கும் என்று கூறி பார்க்கிறார். இதேபோல் தனலட்சுமியிடம் பேசிய இந்த வார கேப்டன் மணிகண்டன் ரஜேஷ், கண்களை மூடாமல் தூங்கவேண்டும் தனலட்சுமி இல்லையென்றால் நாய் குரைக்கும் என்று ஜாலியாக சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.

ஆனால் ராபர்ட் மாஸ்டர், “நாய் குரைத்தால் எங்களுக்கும் தான் தலைவலி.. சரி நாயைப் பார்த்து நாய் குரைக்கட்டும்” என்று சொல்லி எழுந்துவிட்டார். இதன் காரணமாக ராபர்ட் மற்றும் தனலட்சுமி இருவருக்குமான சண்டை வெடிக்கத் தொடங்கியது. எனினும் தனலட்சும, “ஓவரா பேசுறீங்க மாஸ்டர்.. நாய்ங்குறீங்க.. செருப்பால அடிப்பேங்குறீங்க.. என்னை நாய் என்று சொல்லிக்கொள்ளுங்கள் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை” என்று கூறினார்.

பின்னர் தனலட்சுமிக்காக, ஷிவின் கணேசன், ரச்சிதா உள்ளிட்டோர் அவரிடம் சென்று வாதிட்டனர். இதேபோல் அவர் அப்படி பேசியது தவறுதான் என்று தனலட்சுமியையும் தேற்றினர். ஆனாலும் தனலட்சுமி சமாதானம் ஆகவில்லை. இருப்பினும் பெரிய அளவில் தனலட்சுமி சண்டை போடவும் இல்லை. ஆனால் ராபர்ட் மாஸ்டர், “நீ இந்த 2 நாட்கள் ஃப்ரண்ட்லியாக பேசினதால் அப்படி நானும் ஜாலியாக பேசினேன். நீ பேசவில்லை என்றால் உன் பக்கமே வரமாட்டேன். இப்படி எதுவும் நடக்காது. நான் பேசியது சினிமா காமெடி டயலாக் தான்” என கோபமாக விளக்கம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | Rambha Car Accident: "கெட்ட நேரம்.. பிரார்த்தனை பண்ணுங்க".. விபத்துக்குள்ளான நடிகை ரம்பா சென்ற கார்..!

தொடர்புடைய இணைப்புகள்

Robert dhanalkshmi fight in bed room bigg boss 6 tamil

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Dhanalshmi, Robert will find this news story useful.