பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கேபி... ரியோ மனைவி வெளியிட்ட பதிவு... செம வைரல் இப்போ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் நூறு நாட்களுக்கு மேல் கடந்து தங்களது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளனர். இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனல்ஸ் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒவ்வொரு முறையும் பிக்பாஸின் கடைசி வாரத்தில் வெளியேறிய போட்டியாளர்கள் இறுதி போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் ரேகா, அர்ச்சனா, ரமேஷ், அனிதா, சனம், வேல்முருகன் போன்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

ஒவ்வொரு சீசனின் கடைசியிலும் ஒரு அதிரடி திருப்பத்தை போட்டியாளர்கள் முன் வைப்பது பிக்பாஸின்  வழக்கம். அதாவது தனக்கு முதல் இடம் கிடைக்காது என்று நினைக்கும் போட்டியாளர்கள் பிக்பாஸ் கொடுக்கும் ஐந்து லட்சத்தை பெற்றுக்கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்பதாகவே வீடு திரும்பலாம். கடந்த சீசனில் கவின் அப்படி  சமயோஜிதமாக யோசித்து அந்த ஐந்து லட்சத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினார். இந்நிலையில் இந்த சீசனில் யார் அப்படி வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர். இந்நிலையில் கேபி 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் ரியோவின் மனைவி ஒரு பதிவிட்டுள்ளார் அதில் "இது தான் பிக்பாஸ் வீட்டில் கேபி ரித்திக்காக தைத்து கொடுத்த டிரஸ். ரியோவுக்கு ஒரு கியூட் தங்கை கிடைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. லவ் யூ கேபி" என்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கேபி... ரியோ மனைவி வெளியிட்ட பதிவு... செம வைரல் இப்போ..! வீடியோ

Tags : Rio, Gaby

தொடர்புடைய இணைப்புகள்

Rio wife sweet message to gaby ரியோ மனைவி வெளியிட்ட பதிவு

People looking for online information on Gaby, Rio will find this news story useful.