நீதி,நேர்மைன்னு பேசுனவங்கலாம் 'உள்ள' இருக்காங்க... யாரை சொல்றாரு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த வார நாமினேஷனில் அர்ச்சனா,அனிதா, ஷிவானி, ஆஜீத், சோம், ரியோ மற்றும் ஆரி ஆகியோர் இடம்பிடித்து இருந்தனர். இதில் நேற்று முன்தினம் எபிசோடில் ரியோ, ஆரி இருவரும் காப்பாற்றப் பட்டனர். தொடர்ந்து நேற்று ஷிவானி, அனிதா, சோம் ஆகியோர் காப்பாற்றப்பட்டதாக பல்வேறு வழிகளில் கமல் அறிவித்தார். ஆஜீத், அர்ச்சனா மட்டுமே எஞ்சி இருந்தனர்.

இதில் அர்ச்சனா வெளியேறுவதாக கமல் அறிவித்தார். இதைக்கேட்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆஜீத், அர்ச்சனா இருவரில் அர்ச்சனா தான் வலிமையான போட்டியாளர் என்பதால் இந்த அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கலாம். தன்னுடைய வெளியேற்றத்தை அர்ச்சனா இயல்பாக எடுத்துக்கொள்ள, பிக்பாஸ் அவருக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லி விர்ச்சுவல் ஹார்ட் ஒன்றையும் அளித்தார்.

இதையடுத்து சோம், ரியோ, கேப்ரியலா மூவரும் அர்ச்சனா வெளியேற்றம் குறித்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது சோம் தப்பு பண்ணவங்க எல்லாம் உள்ள இருக்காங்க, அவ ஏன் போகணும்? என்று கூற, பதிலுக்கு ரியோ நீதி, நேர்மைன்னு பேசுனவங்க உள்ள இருக்காங்க என வருத்தப்பட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் மறுபடியும் மொதல்ல இருந்தா? என கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Rio, Som and Gabriella talks about Archana Eviction

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.