மீண்டும் ஒன்று சேர்ந்த அண்ணாத்த படக்குழுவினர்.. என்னவா இருக்கும்.. ரசிகர்கள் குழப்பம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மீண்டும் ஒன்று சேர்ந்த அண்ணாத்த படக்குழுவினர்.. என்னவா இருக்கும்.. ரசிகர்கள் குழப்பம்!

Advertising
>
Advertising

சென்னை : அண்ணாத்த படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் தன் வீட்டுக்கு அழைத்து பேசியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு.. புதுச்சேரியில் பேனர்கள் கிழிப்பு பரபரப்பு!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படம் கடந்த நவம்பர் 4ஆம் தேதி வெளியானது. அந்த படத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி,சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சிறுத்தை சிவா இயக்கியுள்ள  இப்படத்திற்கு, டி இமான் இசையமைத்திருந்தார். இந்நிலையில் படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் தன் வீட்டுக்கு அழைத்து பேசியுள்ளார்.

தீபாவளி விருந்து:

                 தீபாவளி ஸ்பெஷலாக இந்த படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஒரு ஊர் தலைவராக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், தங்கையாக கீர்த்தி சுரேஷ்-ம் அதன்பின் அத்தை பெண்ணாக குஷ்புவும், மீனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரஜினிகாந்த்-ன் பேரன் இப்படத்தை பார்த்து ரஜினிகாந்தை கட்டிப்பிடித்து பாராட்டினார் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

2021இல் விவாகரத்து செய்து கொண்ட திரை பிரபலங்கள் !


கலவையான விமர்சனம்:

                    இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை முதலில் பெற்றது. ஒரு பக்கம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மறுபக்கம் படத்தின் வசூல் ஏறிக்கொண்டே இருந்தது. முதல் இரண்டு நாட்களில் தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையையும் பெற்றது. தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலிலும் முதலிடத்தில் இருந்தது. சினிமா விமர்சகர்களால் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் திரையரங்கிற்கு கூட்டமாக வந்து பார்த்தனர்.


விடாத மழை:

                      படம் ரிலீசுக்கு பிறகு தமிழகம் முழுவதும் இடைவிடாத மழை பெய்ததால் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் வருமா என சந்தேகம் இருந்தபோது. குடும்பங்கள் இப்படத்தை கொண்டாடிய நிலையில், எல்லா இடத்திலும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியானது. அதன்பின் மழைக்கு பின்னரும் திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக குடும்பங்கள் கூடின. பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் ஆகின. அண்ணாத்த பெரும் வெற்றி அடைய வேண்டிய படம் எனவும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அது ஓரளவு வெற்றி அடைந்தது என ரஜினிகாந்த்  ஆடியோ ஒன்றில் கூறியிருந்தார்.


50வது நாள்:
                     
                        படத்தின் 50வது நாளன்று படக் குழுவினரை வீட்டிற்கு நேரில் அழைத்து ரஜினிகாந்த் படத்தில்  ஒவ்வொருவரின் வேலை குறித்து மிகவும் பாராட்டினார். அதன்பின் படக்குழுவினருக்கு தங்கச் சங்கிலியை பரிசளித்தார். அதன்பின் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அவர்களுக்கும், சிறுத்தை சிவா-விற்கும் மனமார்ந்த நன்றி கூறினார். பின்னர் பேசிய இசையமைப்பாளர் டி இமான் இந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் என கூறினார்.

இந்நிலையில் சமீபத்தில் மறுபடி படக் குழுவினரை  நேரில் வரவழைத்து பேசியதாக தகவல் வெளிவந்துள்ளது. சில புகைப்படங்களும் சமூகவலைத்தளத்தில் பகிரப்படுகிறது. இதனால் இந்த கூட்டணி மீண்டும் இணைகிறதா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே வந்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Reunited Annaatthe film crew again in Rajinikanth house

People looking for online information on Annaatthe, அண்ணாத்த, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ரஜினிகாந்த் will find this news story useful.