''ஒரே ஷாட்... தொடர்ந்து 14 நிமிஷம்... இந்திய சினிமாவில் மேலும் ஒரு வரலாறு''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமிதாப் பச்சன் தற்போது எஸ்ஜே சூர்யாவுடன் 'உயர்ந்த மனிதன்' படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை 'கள்வனின் காதலி' உள்ளிட்ட படங்களை இயக்கிய தமிழ்வாணன் இயக்குகிறார்.

மேலும் அவர் சிரஞ்சீவியுடன் இணைந்து தெலுங்கில் ''சேரா நரசிம்ம ரெட்டி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சுதீப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இதனையடுத்து அமிதாப் பச்சன் ஹிந்தியில் 'சேரே' என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை ஆனந்த் பண்டிட் தயாரிக்க, ரூமி ஜாஃப்ரி இயக்கிவருகிறார். மேலும் இந்த படத்தில் அவருடன் இம்ரான் ஹாஸ்மி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் ரசூல் பூக்குட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் அமிதாப் பச்சன் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ''அமிதாப் பச்சன் அவர்கள் இந்திய சினிமாவில் மேலும் ஒரு வரலாற்றை பதிவு செய்துள்ளார்.

நேற்று சேரே படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின் கடைசி நாள் கடைசி காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் ஒரே ஷாட்டாக 14 நிமிடங்கள் படமாக்கப்பட்ட ஒரே ஷாட்டில் தொடர்ந்து நடித்தார்.  ஒட்டுமொத்த படக்குழுவும் எழுந்து நின்று கைத்தட்டியது. டியர் சார், சந்தேகமே இல்லாமல் நீங்கள் உலகில் சிறந்த மனிதர்களில் ஒருவர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Resul Pookutty praised Amitabh Bachchan's performance in Chehre

People looking for online information on Amitabh Bachchan, Chehre, Resul pookutty will find this news story useful.