பத்மஶ்ரீ விருதுப்பெற்ற மூத்த பாடகர் காலமானார்..! - கலங்கும் திரைத்துறையினர்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பத்மஶ்ரீ விருதுப்பெற்ற மூத்த பாடகர் காலமாகியிருக்கும் தகவல் திரைத்துறையினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் பல்வேறு திரைத்துறை பிரபலங்களின் மரணங்கள், ரசிகர்களுக்கு தொடர்ந்து சோகத்தை அளித்து வருகிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த், ரிஷி கபூர், நடிகர் சேதுராமன் உள்ளிட்டோரின் வரிசையில், நேற்று முன்னணி இயக்குநர் நிஷிகாந்தின் மறைவு, மேலும் கலக்கத்தை ஏற்படுத்தின. 

இந்நிலையில் தற்போது மூத்த இந்திய இசைப்பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் காலமாகியிருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. கிளாசிக்கல் சங்கீதத்தில் தேர்ந்தவரான இவர், பல்வேறு இசை கச்சேரிகள், கிளாசிக்கல் ஆல்பங்கள் மற்றும் திரைப்படங்களிலும் பாடியுள்ளார். மேலும் இவர் சங்கீத கலா ரத்னா, பத்ம பூஷன், பத்மஶ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். 

அமெரிக்காவில் வசித்து வந்த இவர், நேற்று காலமாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது. தனது 90-வது வயதில் அவர், வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தியுள்ளார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி உட்பட, பல்வேறு திரைத்துறை பிரபலங்கள் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

தொடர்புடைய செய்திகள்

மூத்த பாடகர் காலமானார் | Renowned singer pandit jasraj passed away

People looking for online information on Narendra Modi, Pandit Jasraj, Passed away, Singer Jasraj will find this news story useful.