OFFICIAL: பிக்பாஸ் வீட்டில் இருந்து... வெளியேறிய 'முதல்' நபர் இவர்தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது விறுவிறுப்படைந்துள்ளது. ரியோ, ரேகா, சனம் ஷெட்டி, ஷிவானி, ரம்யா பாண்டியன், ஆஜித், வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், ஆரி, கேப்ரியலா, அனிதா சம்பத், சம்யுக்தா, சோமசேகர், ஜித்தன் ரமேஷ் என மொத்தம் 16 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 17-வது போட்டியாளராக விஜே அர்ச்சனா சமீபத்தில் உள்ளே நுழைந்துள்ளார். இதனால் போட்டி தற்போது மிகவும் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் ரேகா, சனம் ஷெட்டி, ஷிவானி, ரம்யா பாண்டியன், ஆஜித், சம்யுக்தா, கேப்ரியலா ஆகிய 7 பேர் நாமினேட் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டனர்.

இதில் நேற்று ஷிவானி, ரம்யா பாண்டியன், ஆஜித் ஆகிய மூவரும் மக்களால் காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார். இதனால் சனம், ரேகா மற்றும் கேப்ரியலா ஆகிய  ஒருவர் தான் வெளியே செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சனம், கேப்ரியலா இருவரும் மக்களால் காப்பாற்றப்பட ரேகா குறைந்த வாக்குகள் பெற்றதால் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Rekha eliminated from Bigg Boss House with Least votes

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.