BIGG BOSS 6 TAMIL : "நான் நடிக்கிறேனா..?".. கண்ணீரில் தத்தளித்த ஜிபி முத்து .. முழுசா என்னதான் நடந்தது..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

reason behind why GP Muthu Cried bigg boss 6 tamil
Advertising
>
Advertising

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

reason behind why GP Muthu Cried bigg boss 6 tamil

கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் தனலட்சுமி  தன்னை நடிப்பதாக சொன்னதாக சொல்லி விட்டதாக ஜிபி முத்து அழக்கூடிய ப்ரோமோ காட்சிகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் விரிவாக என்ன நடந்தது என்பதை எபிசோடில் விளக்கமாக காண முடியும். அதன்படி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அணிகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றனர். இதில் ஆயிஷா மற்றும் தனலட்சுமி இருவரும் ஒத்த கருத்துடன் ஒரு புகாரை முன்வைத்தனர். அப்போது ஆயிஷா, ஜிபி முத்து மீது ஒரு புகாரை முன்வைக்கிறார். அதாவது ஜிபி முத்து மற்ற அணிகளுக்கும் சேர்த்து வேலை செய்வதாக குறிப்பிடுகிறார். இதை ஜனனி டீல் செய்கிறார். இப்படி மற்ற அணிகளுக்கும் சேர்த்து வேலை செய்தால் ஜிபி முத்து வெளியே சென்று படுக்க வேண்டும் என்று ஜனனி குறிப்பிடுகிறார்.

அப்போது ஆவேசமாகும்,  ஜிபி முத்து, “ஏன்.. எதுக்கு? நான் என்னுடைய வேலைகளை பார்த்து முடித்த பின்புதான் மற்ற அணிகளுக்கு வேலை செய்கிறேன். என்னால் அப்படித்தான் இருக்க முடியும். என் வேலைகளை மட்டும் என்னால் செய்து கொண்டிருக்க முடியாது. என் வேலைகள் முடியாமல் அப்படியே கிடந்தால், அதாவது என்னுடைய கடமையை நான் செய்யாமல் இருந்தால் நீங்கள் கேட்கலாம். அப்படி நான் என் கடமையில் இருந்து தவறிட்டேன்னு சொல்லுங்க.. நான் வெளிய போக தயார்.. எங்க வேணாலும் போய் படுத்துக்கிறேன்” என ஜிபி முத்து ஆவேசமாக பெட்ரூமை விட்டு வெளியே படுக்க தயார் என பேசினார்.

இதை அடுத்து பேசிய ஆயிஷா, “அவ்வாறு செய்தால் நீங்கள் எலிமினேட் ஆகிவிடுவீர்கள்” என சொல்கிறார். ஆனாலும் ஜிபி முத்து வெளியேறிவிடுவேன் என சொன்னது குறித்து தனலட்சுமி, “அதெப்படி நீங்கள் அணியை விட்டு வெளியேறி விடுவேன் என சொல்லலாம்?” என ஆவேசமாகி கேட்க, ஜிபி முத்துவோ, தான் அவ்வாறு சொல்லவில்லை என வாதிடுகிறார். பின்னர் ஆயிஷா மற்றும்  தனலட்சுமியிடம்தான் பேசும்போது அவர்கள் முறைப்பது போல் பார்த்ததாக ஜிபி முத்து கூற, ஒரு கட்டத்தில் தனலட்சுமியோ ஜிபி முத்து தன்னை ஒருமையில், ஆவேசமாக மரியாதை இல்லாமல் பேசுவதாக புகார் வைத்ததுடன், ஜிபி முத்துவை பார்த்து, “நடிக்காதீங்க?” என கூறிவிட்டார்.

அப்போதுதான் ஜிபி முத்து, “நான் நடிக்கிறேனா” என எமோஷனல் ஆகிறார். மற்றவர்கள் அவரை அப்போது பிடித்துக்கொள்ள, அவர்களின் பிடியில் இருந்து விலகி தனலட்சுமியிடம் சென்று, “எம்மா நீ என் பொண்ணு மாதிரி.. நீ எப்படி என்ன நடிக்கிறேன்னு சொல்ற? நான் உங்கிட்ட என்ன மரியாதை கொடுக்கல.. உன் கால்ல விழுந்து சொல்லணூமா?” என பேசுகிறார். இதனை தொடர்ந்து தனியே சென்று டைனிங் டேபிளில் ஜிபி முத்து கண்ணீர் விட்டு அழுதார். அவரை சக ஹவுஸ்மேட்ஸ் சாப்பிட அழைத்தும், அவர் சாப்பிடாமல் எழுந்து சென்றுவிட்டார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Reason behind why GP Muthu Cried bigg boss 6 tamil

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg boss gp muthu, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, GP MUTHU, GP Muthu Cried will find this news story useful.