"தலைவர் ரஜினிகாந்துடன் இணைகிறேனா?" - மனம் திறக்கும் ரங்கராஜ் பாண்டே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தலைவர் 168’ திரைப்படத்தில் நடிகர் ரங்கராஜ் பாண்டே நடிப்பதாக வெளியான தகவல் குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.

பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே, அஜித் குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கிய ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் நடிப்பை தொடரும் எண்ணம் இருப்பதாக அவர் பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 168’ திரைப்படத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்கவிருப்பதாக தகவல்கள் பரவின. இது குறித்து Behindwoods- ன் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் ‘மடைதிறந்து’ நிகழ்ச்சியில் பிரத்யேகமாக ரங்கராஜ் பாண்டே பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

அதில் கூறுகையில் “நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியான போது இயக்குநர் சிறுத்தை சிவா தன்னை தொலைப்பேசியில் அழைத்து நடிப்பை பாராட்டினார். ஆனால், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் நடிப்பதற்காக யாரும் தன்னை அனுகவில்லை என்றும், அப்படியே அனுகினாலும், லட்டு திண்ண கசக்குதா..?” என தெரிவித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு டி,இமான் இசையமைக்கிறார். இப்படம் குறித்த கூடுதல் அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

"தலைவர் ரஜினிகாந்துடன் இணைகிறேனா?" - மனம் திறக்கும் ரங்கராஜ் பாண்டே! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Rangaraj Pandey might be joining hands with Superstar Rajinikanth's Thalaivar 168

People looking for online information on Rajinikanth, Rangaraj Pandey, Sun pictures, Thalaivar 168, Veeram Siva will find this news story useful.