தங்கச்சினு தான் சொன்னாரு... நெறைய 'உண்மை'கள் வெளில வருதே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் பல பேருடைய உண்மையான ஆட்டம் சிலபல இடங்களில் வெளிப்பட்டன. கால் சென்டர் டாஸ்க்கில் ஆரியின் உண்மை முகத்தை வெளிப்படுத்த போவதாக கூறி, பாலாஜி ஆரிக்கு ஆதரவு பெருகும்படி செய்து விட்டார். கடைசியில் அவருக்கு எதிராகவே  பூமராங் போல அது திரும்பி விட்டது. வான்டட் ஆக தானே நாமினேஷனில் பாலாஜி தன்னை இணைத்து கொண்டார்.

ஒருபுறம் ஷிவானி, பாலாஜி அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க அவர்களுக்கு சற்று தள்ளியிருந்த அனிதா, ரம்யா, ஆஜீத் மூவரும் அவர்கள் இருவரையும் பற்றி கிண்டல் அடித்து கொண்டிருந்தார். அப்போது ஆஜீத் பாலாஜி-ஷிவானி குறித்த ரகசியம் ஒன்றை வெளிப்படுத்தினார். அதாவது எக்ஸர்சைஸ் செய்து கொண்டிருந்த போது இருவரும் பேசியதை ஆஜீத் ஒட்டு கேட்டுள்ளார். அதில் பாலாஜி, ஷிவானியை தங்கச்சி என அழைத்திருக்கிறார்.

பதிலுக்கு ஷிவானி அப்படி சொல்லாதீங்க என தெரிவித்தாராம். இதனால் தான் அந்த இடத்தை விட்டு வந்து விட்டதாக ஆஜீத் கூறினார். இதைக்கேட்டு அனிதா, ரம்யா இருவரும் விழுந்து,விழுந்து சிரித்தனர். அப்போது பாலாஜி, ஷிவானி இருவரும் அந்த இடத்துக்கு வர ரம்யா பாண்டியன், ஷிவானி போலவே இமிடேட் செய்து அவரை தன்னால் முடிந்தளவுக்கு வெறுப்பேற்றினார். இதைப்பார்த்த ரசிகர்கள் எது தங்கச்சியா? என ஷாக்காகி உள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Ramya Pandian, Anitha and Aajeedh talks about Shivani

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.