"ஏ.. விழுந்து தொலைச்சிராத".. குழந்தை ஜனனியிடம் சரண்டர் ஆன ராம்.. செம க்யூட்ப்பா இவரு 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் பழங்குடியினர் Vs ஏலியன்கள் டாஸ்க் தொடங்கியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "நீங்க Already அட்டக்கத்தின்னு".. மூஞ்சுக்கு நேராக அசீமிடம் சொன்ன விக்ரமன்.. Weekend களைகட்ட போகுது போல

இதில் பழங்குடியின மக்களாக அசீம், ஷிவின், விக்ரமன், ஏடிகே, ராம், விஜே கதிரவன், மைனா ஆகியோர் முதல் நாள் இருந்தனர். ஏலியன்களாக தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, அமுதவாணன், ரச்சிதா, ஆயிஷா, மணிகண்டா ஆகியோர் இருந்தனர். இவர்களின் அணி அடுத்தடுத்த நாட்களில் இடம் மாறக்கூடும்.

இந்த ஆட்டத்தின்படி பழங்குடி மக்களுக்கு தேவைப்படும் அதிசய பூ, ஏலியன்ஸ்களின் பகுதிலும், ஏலியன்ஸ்களுக்கு தேவைப்படும் அதிசயக் கல் பழங்குடிகளின் பகுதியிலும் இருக்கும். அந்த அதிசயக் கல் பழங்குடிகளின் உழைப்பில் தயாரிக்கப்படும். இதனால் ஒருவர் இன்னொருவரது ஏரியாவுக்குள் சென்று அவர்களுக்கு தேவையானதை எடுத்து வருவது இந்த டாஸ்கில் முக்கிய அம்சம்.

அப்படி போகும் போது அந்த போட்டியாளர் பிடிபட்டால், அவரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து எதிரணியினர் தொடாமல் பேசியும் ரியாக்ஷன் பண்ணியும் டார்ச்சர் செய்வார்கள். பதிலுக்கு அந்த பிடிபட்டவர் ரியாக்ட் செய்தால் தோல்வி என அர்த்தம். அப்படியானால் என்ன பண்ண வேண்டும்? மாட்டிக்கொள்ளும் அந்தக் கூட்டத்துடன் சேர்ந்துவிட வேண்டும். ஆனால் மன திடகாத்திரத்துடன் எதிரணியினரின் டார்ச்சருக்கு ரியாக்ட் செய்யாமல் பஸ்ஸர் அடிக்கும் வரை இருந்தால் அவர்களுக்கு, தேவைப்படும் பொருளுடன் வெற்றியுடன் வெளியே செல்லலாம்.

இதில் பூக்களை எல்லாம் பழங்குடியை சேர்ந்த அசீம் ஏலியன்களின் பகுதியில் இருந்து திருடி சென்றுவிட்டார். இரவோடு இரவாக நடந்த இந்த சம்பவத்தை அடுத்து, அதே இரவில் விழித்துக்கொண்டு பாத்ரூம் வந்த குயின்ஸி நினைத்தால் பெரிதாக்கியிருக்கலாம். ஏனென்றால் பாத்ரூம் சென்றுவிட்டு வரும் குயின்ஸி பூக்களை பார்வையிடுகிறார். அங்கு பூக்கள் காணவில்லை. இதை பார்த்த ரசிகர்கள், “என்ன அலறுவாங்கனு பார்த்தா.. பெட்ரூம்ல போயி இழுத்து போர்த்திகிட்டு தூங்குறாங்க” என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஆம், பூக்கள் காணாமல் போனதை பார்த்து சற்றும் அதிர்ச்சியடையாத, அலட்டிக்கொள்ளாத குயின்ஸி, தன் பாட்டுக்கு பெட் ரூமுக்கு சென்று தூங்க தொடங்கிவிட்டார். பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் என்கிற ரேஞ்சுக்கு வந்த குயின்ஸி அடுத்த செகண்ட் தானும் சென்று ஓய்வெடுக்க தொடங்கிவிட்டார் என க்யூட்டாக கலாய்த்து வருகின்றனர். குயின்ஸியை பொருத்தவரை ரசிகர்கள் பலருக்கும் பிடித்தமான போட்டியாளராக பிக்பாஸ் வீட்டில் நீடித்து வருகிறார். பெரும்பாலும் யாருடனும் சண்டையிடாத குயின்ஸிக்கு ஒரே ஒரு முறை ஜனனியிடம் சண்டை வந்தது. இதேபோல் அசீம் பலமுறை கமல்ஹாசன் முன்னிலையில் குயின்ஸி மீது குறைகளை சொல்லியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில்தான் பூட்டு விளையாட்டு தொடர்ந்தது.. அதன்படி நான் ஒரு ஸ்போர்ட்ஸ் சாம்பியன் என்று ஒருநாள் தௌலத்தாக சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்த ஜனனியிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. முயல்குட்டி போல் ஓடிய ஜனனி, பாவத்திலும் பாவமான ராமை, டார்கெட் செய்ய, அவரோ, “அதென்ன கைது.. விலங்கு மாட்டுறது, பூட்டு போடுறதுனா நான் தான் கெடைச்சனா” என்கிற மோடில் மனுசன், “இந்த முறை சில்வண்டு சிக்காதுடா” என்று ஓட்டம் பிடித்தார்.

ஆனால் அவரை துரத்திப் பிடிக்கும் சாகசத்தின்போது குழந்தை ஜனனியின் காலில் இடிபட்டு அடி விழ,  “சனியன் எனக்குனே வருது” என்று அன்று தனா சொன்ன அதே மோடில் இப்போது ஜனனி இருந்தார்.  அதன் பிறகு, காலில் அடிபட்ட ஜனனிக்கு சிரமத்தை கொடுக்க கூடாது என யோசித்த நம் ராம் “சரி.. சரி.. விழுந்து கிழுந்து வெச்சிராத... இந்தா பூட்டித் தொல” என்று தானாக முன்வந்து க்யூட்டாக சரணடைந்தார். அந்த மன்சுதான் சார் கடவுள்.!

Also Read | "வச்சு செஞ்சிட்டே, உன்ன நம்பவே மாட்டேன்".. அசீம் பண்ண காரியத்தால் வெறுப்பில் மணிகண்டன்!!

தொடர்புடைய இணைப்புகள்

Ram Cutely surrender to janany aliens tibes task bigg boss 6

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, Janany, Myna, Queency, Ram, Vikraman will find this news story useful.