நாமினேட் செய்த பாவனியிடம் ராஜூ சொன்னது என்ன? .. ஒரு கணம் உறைந்து நின்ற பாவனி.. பரபரப்பு ப்ரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Vijay Television, BiggBossTamil5: விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியி 5வது சீசன் 92 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

போட்டியாளர்கள் அனைவருமே ஃபினாலே ரேஸ் நெருங்கிவிட்டதால், கடந்த வாரம் பிக்பாஸால் நாமினேட் செய்யப்பட்டன. இதனை அடுத்து டிக்கெட் டூ கிராண்ட் ஃபினாலே டாஸ்குகள் வைக்கப்பட்டன. இதன் ஒரு அங்கமாக முட்டை உடைத்தல் மற்றும் காப்பாற்றப்படுதல் டாஸ்க் வைக்கப்பட்டது.

இந்த டாஸ்க்கில் தான் தாமரை மற்றும் பிரியங்கா இருவரின் மோதல் குறித்த பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறின. இந்த சம்பவங்களை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் ஒரு Open நாமினேஷனை அறிவித்திருக்கிறார். அதன்படி போட்டியாளர்கள் தாங்கள் நாமினேட் செய்ய விரும்பும் குறிப்பிட்ட போட்டியாளரிடம் நேரடியாக சென்று அவர்களின் மீது மாலை போட்டு அவர்களை நாமினேஷன் செய்து, எதற்காக அவர்களை நாமினேஷன் செய்கிறார்கள் என்கிற காரணத்தையும் குறிப்பிட வேண்டும்.

‘அப்படி சண்டை போட்டவங்களா.. இப்படி இருக்காங்க!’.. ரசிகர்களை நெகிழவைத்த கடைசி நேர காட்சிகள்!

மாலை அணிவித்து நாமினேஷன்

இதன் அடிப்படையில் ஒவ்வொரு போட்டியாளரும் தாங்கள் நாமினேஷன் செய்ய விரும்பும் போட்டியாளர்களுக்கு மாலையை அணிவித்து நாமினேஷன் செய்தனர்.  நேருக்கு நேராக நின்று தாங்கள் நாமினேட் செய்யும் போட்டியாளர்களின் மீதான விமர்சனத்தை ஒவ்வொரு போட்டியாளருமே முன்வைத்தனர்.

அந்த வகையில் அமீர் ராஜூவுக்கும், சிபி நிரூப்புக்கும் மாலை அணிவித்து நாமினேட் செய்துள்ளவை ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளன. தாமரையும் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். இதன் ஒரு அங்கமாக பாவனி, ராஜூவை நாமினேட் செய்துள்ள சம்பவம் நடந்தது. பாவனி ராஜூவை நாமினேட் செய்யும்போது,  “ஹேப்பி நாமினேஷன்ஸ்” என்று சொல்லி அவருக்கு மாலை அணிவித்து நாமினேட் செய்தார்.

டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்

முன்னதாக, டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில், பாவனியின் கூட்டில் இருந்த முட்டைகளை ராஜூ உடைக்க, அதன் பின்னர் ராஜூவின் முட்டைகளை உடைக்க சென்ற பாவனியை ராஜூ தடுத்தார். அப்போது, பாவனிக்கும் ராஜூவுக்கும் இடையில் பிசிக்கல் ஸ்ட்ரகில் நடந்தது. அதில், “பிசிக்கலாக ஸ்ட்ராங்காக இருக்கிறீர்கள். நான் கிட்ட வரும் முன்பே தடுக்கிறீர்கள். இது சரியில்லை” என பாவனி புகார் கூறினார்.

"தப்பு செஞ்சவன விட தூண்டுறவன் கெட்டவன்".. தாமரையின் வைரல் வசனம்.. சம்பவம் இருக்குமோ!

வாக் அவுட் செய்த பாவனி

அந்த டாஸ்க்கில் பாவனியின் கைகளை ராஜூ, இறுக்கமாக பிடித்துக்கொண்டே, அவரது கூட்டுக்கு சென்று முட்டைகளை உடைத்தார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் அழவேத் தொடங்கிய பாவனி, தம்மிடம் மீதம் இருந்த முட்டைகளை தாமரை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு கொடுத்துவிட்டு வாக் அவுட் செய்த சம்பவமும் நடந்தது. அதன் பிறகு இந்த போட்டியில் பாவனி இறுதி விளையாண்டு இந்த டாஸ்கில் இருந்து வெளியேறினார். எனினும் சக போட்டியாளர்களால் பாவனியின் மன உறுதி பாராட்டப்பட்டது.

கமல்ஹாசன் முன்னிலையில்...

அதன் பின்னர் கமல் முன்னிலையில், முட்டை டாஸ்கில் தன்னை உடல் ரீதியாக ராஜூ  ஹர்ட் பண்ணியதாக பாவனி பேசினார். இதற்கு பதில் அளித்த ராஜூ, “பாவனியிடம் அந்த முட்டை டாஸ்கில் உடலை ஹர்ட் பண்ணிவிட்டேனா? என கேட்டபோது அவள் இல்லை என சொல்லிவிட்டு இப்போது உங்கள் முன்னிலையில் இப்படி பேசுகிறாள் சார்” என கூறினார்.

நேத்து ஒரு பேச்சு - இன்னைக்கு ஒரு பேச்சு

இந்நிலையில்  தற்போது பிக்பாஸ் வீட்டில் நடந்த Open நாமினேஷனில் ராஜூவை பாவனி நாமினேட் செய்தன் பின், ராஜூ பாவனியை நோக்கி, “நீ நேத்து ஒரு பேச்சு - இன்னைக்கு ஒரு பேச்சு பேசுவ!” என கடுமையாக விமர்சிக்கிறார். பாவனி அமைதியாய் நிற்கிறார், இதனை ப்ரோமோவில் காண முடிகிறது. ராஜூ - பாவனியின் விரிவான உரையாடல்கள் எபிசோடில் இடம் பெறும்.

தொடர்புடைய இணைப்புகள்

Raju Serious Critic Pavani Open Nomination BiggBoss5

People looking for online information on BiggBossTamil5, Priyanka, Thamarai, Thamarai Priyaka fight will find this news story useful.