ரஜினி முக்கிய நிர்வாகியுடன் ஆலோசனை.. இன்று வெளியாகிறதா அரசியல் என்ட்ரி பற்றிய அறிக்கை..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினி தற்போது நடத்தியுள்ள திடீர் ஆலோசனை மக்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் மக்கள் மன்றம் என்ற அமைப்பின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். 

தமிழக அரசியலில் ரஜினியின் வருகை குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வரும் சூழலில், நடிகர் ரஜினி நேற்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சென்னையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் முடிவில் தனது நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பேன் என அவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகி சுதாகருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. இதன் முடிவில், இன்று அவரின் அரசியல் நிலைப்பாடு குறித்து அறிக்கை வெளியாகவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

ரஜினியின் அரசியல் குறித்து அறிக்கை | rajinikanth sudden meet with makkal mandram sudhakar on his political entry

People looking for online information on Rajini Makkal Mandram, Rajinikanth will find this news story useful.