''அந்த வலி எனக்கு மட்டும்தான் தெரியும்..'' - அரசியல் என்ட்ரி.. ரஜினி திடீர் அறிக்கை.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் என்ட்ரி குறித்து புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா வைரஸ் பரவியதையடுத்து, ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைதொடர்ந்து அவர் தற்போது வீட்டில் முழு ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் தற்போது தனது அரசியல் என்ட்ரி குறித்து முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தற்போது தனது உடல்நிலையை கருத்தில் கொண்டும், அதற்கு பின் வரும் விளைவுகள் குறித்தும் முடிவெடுத்து, அரசியலுக்கு தற்போது வரவில்லை என்று தெரிவித்துள்ளார். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட மன வலி எனக்கு மட்டும்தான் தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் அரசியலுக்கு வராமல், மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியமோ அதை செய்வேன். ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

அரசியலுக்கு வரவில்லை - ரஜினி அறிக்கை | Rajinikanth latest statement on political entry fans shocked

People looking for online information on Rajinikanth, Rajinikanth Political Entry will find this news story useful.