மரணமடைந்தார் ரஜினியின் முதல் ரசிகர்... துக்கம் அனுசரிக்கும் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மதுரை: ரஜினிகாந்திற்கு முதல் முதலாக ரசிகர் மன்றம் ஆரம்பித்த மதுரை ரசிகர் முத்துமணி மரணமடைந்துள்ளார்.

Advertising
>
Advertising

நடிகர் ரஜினிகாந்த்க்கு தமிழகம், இந்தியாவைத் தாண்டி  உலக நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர்.  ரஜினிகாந்த் சினிமாவில் வில்லனாக 'அபூர்வ ராகங்கள்' படத்தில் ரஜினிகாந்த் அறிமுகமானபோது , ரஜினிக்கு மதுரையில் முதல் 'ரஜினி ரசிகர் மன்றம்' தொடங்கியது முத்துமணி தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை தன்னுடைய செலவில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் பல பணிகளை செய்துள்ளார். ரஜினி ரசிகர்கள் மத்தியில் முத்துமணிக்கு செல்வாக்கு உண்டு.

 1993ம் ஆண்டு மார்ச் 26ம் முத்துமணி திருமணத்தை  நடத்தி வைத்தார். மதுரை முத்துமணி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டபோது ரஜினிகாந்த் முத்துமணியை சென்னைக்கு அழைத்து தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்து அவரது சிகிச்சைக்கு தேவையான உதவிகள செய்தார்.

இந்நிலையில்  உடல்நலகுறைவால்  முத்துமணி நேற்று காலமானார். இறந்த முத்துமணிக்கு லட்சுமி என்ற மனைவியும், சாய் ஹரிணி என்ற ஒரே மகளும் உள்ளனர். மகள் சாய் ஹரிணி ப்ளஸ்-டூ படித்து வருகிறார். முத்துமணி இறுதிச்சடங்கு இன்று மாலை மதுரை தத்தனேரி மயானத்தில் நடைபெற உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth first fan muthumani passed away at madurai

People looking for online information on Muthumani, Rajini, Rajinikanth, RMM will find this news story useful.