"45 வருஷம்".. "இதான் கடைசிப்பாட்டுனு கனவுல கூட".. ‘அண்ணாத்த’ SPB பாட்டு குறித்து கலங்கிய ரஜினி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "அண்ணாத்த".

மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் மற்றும் பலர் இணைந்துள்ள இந்த படத்தை விஸ்வாசம், வேதாளம், வீரம், விவேகம், சிறுத்தை படங்களை இயக்கிய இயக்குனர் சிவா இயக்குகிறார். ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், எடிட்டராக ரூபனும் பணிபுரியும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.

தற்போது இந்த படத்தின் Post Production பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தன. முன்னதாக ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

எப்போதும் ரஜினி - எஸ்.பி.பி கூட்டணி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. ரஜினிகாந்த் படங்களின் துவக்க பாடல்களை S.P.பாலசுப்ரமணியம் பாடுவார். ஆனால் பாடகர் S.P.பாலசுப்ரமணியம் கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி மரணமடைந்தார்.

எனினும் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் ‘அண்ணாத்த’ படத்திற்காக, இமான் இசையில் ரஜினியின் துவக்க பாடலை S.P.பாலசுப்ரமணியம் பாடி கொடுத்துள்ளார். இந்நிலையில் ரஜினிக்காக ‘அண்ணாத்த’ படத்தில் S.P.பாலசுப்ரமணியம் பாடிய ‘அண்ணாத்த.. அண்ணாத்த’ என்கிற இந்த பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ள ரஜினிகாந்த்,  “45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காக பாடிய பாடலின் படப்பிடிப்பின்போது, இதுதான் அவர் எனக்கு பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலில் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read: "என் divorce எப்பவா?"..  ‘சமீபத்தில்’ திருமணம் ஆன நடிகை கொந்தளித்து பதில்! என்ன நடந்தது?

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth emotional tweet SPB sung Annaatthe song at last

People looking for online information on Annaatthe, Rajinikanth, SP Balasubramaniam will find this news story useful.